நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகைள அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும் சிறுவர் விவகார பொலிஸ் துறையினர் இந்த விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சில சமூக ஊடகங்களின் தகவலின்படி இது கொழும்பு பாலத்துறை பகுதியில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.