ரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன, கடுமையான சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இந்த மருந்து வழங்கப்பட்டது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
ரெம்டெஸ்விர் வழங்கப்பட்டவர்களால் ஒரு வார காலத்தில் நோயாளிகளால் மருத்துவமனையிலிருந்து வெளியேற முடிந்தது என இந்த பரிசோதனைக்கு தலைமை தாங்குகின்ற மருத்துவர் ஸ்டட்டிற்கு தெரிவித்துள்ளார் எனவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
எங்கள் நோயாளிகளில் அனேகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பதே சிறந்த செய்தி என தெரிவித்துள்ள இந்த மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைளிற்கு தலைமை தாங்கும் மருத்துவர் கதிலீன் முலானே,இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் சிக்காக்கோ பல்கலைகழகத்தின் தொற்றுநோய் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மருத்துவ பரிசோதனையின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியானதும் உத்தியோகபூர் அறிவிப்பு வெளியாகும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
கிலியாட் சயன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டெஸ்விர் எபோலா நோயாளிகள் மத்தியில் பரிசோதிக்கப்பட்ட வேளை வெற்றியளிக்கவில்லை என்பது குறி;ப்பிடத்தக்கது.
எனினும் கொவிட் 19 உடன் தொடர்புபட்ட கொரோனா வைரசினை இந்த மருந்தினால் குணப்படுத்த முடியும் என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.