நாரம்மலயில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மாத்தளை வரக்காமுறயைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மரண மடைந்துள்ளனர். பஸ்ஸொன்றுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியபோதே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நேற்றுக்காலை 6.15 மணி யளவில் நாரம்மல, மெட்டியகன என்ற இடத்தில் இடம்பெற்ற இக்கோர விபத்தில் வரக்காமுறயில் வசிக்கும் நான்கு இளைஞர்களும் ஸ்தலத்திலேயே பலியாகினர். வெளிநாட்டில் இருந்து நேற்று அதிகாலை நாடு திரும்பிய இளைஞர், ஒருவனை அழைத்து வருவதற்கு முச்சக்கர வண்டியில் கட்டுநாயக்க
விமான நிலையம் சென்றுவிட்டு வீதி திரும்பிக்கொண்டிருந்தபோதே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் மொகமட் சாகிர் (22) அலி மதீன் (20) பெளசுல் அமீன் (26) முஹம்மட் நாபிக் (25) ஆகிய நால்வருமே உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டுக்கு சென்று இரண்டு மாதத்தில் நாடு திரும்பிய மொஹமட் சாகீரை அழைத்து வந்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவத்தில் சாகிருடைய சகோதரர் பெளசுல் அமீனும் மரணமடைந்துள்ளார்.
இவர்கள் உக்குவளை பிரதேச சபை உறுப்பினர் மொகமட் சபீரின் புதல்வர்களாவர். அக்குறணையைச் சேர்ந்த மற்றைய இருவரும் வரக்காமுறையில் வசித்து வந்துள்ள நிலையில் தனது நண்பர்களை அழைத்து வர விமான நிலையம் சென்றுள்ளனர்.
குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சுக்கு நூறாகியுள்ளது.
இரண்டு வாகனங்களும் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மரணமடைந்த நான்கு இளைஞர்களினது சடலங்கள் நாரம்மல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பஸ் சாரதி நாரம்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரம்மல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பாளர் போபால் ஜயதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டது.