பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் பட்டப்பகலில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ஆளுங்கட்சி கூறி வருகிறது. அதே நேரத்தில் பீகாரில் காட்டாட்சி நடைபெறுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டப்பகலில் மாணவன் கடத்திச் செல்லப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.