பீகார் மாநிலத்தில் பாம்பிற்கு ராக்கி கட்ட முயன்றவரின் காலை பாம்பு கடித்தால் அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
பீகார் மாநிலம் சரன் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மன்மோகன், இவர் சிறு வயது முதல் பாம்புகளை பிடித்து வருகிறார்.
இவருக்கு பாம்புகள் குறித்தும், அதன் விஷத்தன்மைகள் குறித்தும் நன்கு தெரியும்,அந்த பகுதியில் எந்த வீட்டில் பாம்பு புகுந்தாலும் இவர் தான் பிடிப்பார். பாம்பு கடித்தால் அவர்களுக்கு முதலுதவி செய்து பலரை உயிரை காப்பாற்றியுள்ளார். பாம்புகளுடனேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலோக பயணித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் இவர் தான் வைத்திருந்த பாம்பு களுக்கு ராக்கி கயிறு கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதை காண அவர் வீட்டு பகுதியில் ஏராளமான கூட்டம் இருந்தது. இவரை பலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இப்படியாக இவர் பாம்பை பிடித்து ராக்கி கயிறு கட்டும் முயற்சி செய்த போது மெதுவாக பாம்பு ஒன்று அவரது கால் பக்கம் சென்று காலை கொத்தியது.
முதலில் சற்று வலியை உணர்ந்த அவர் காலை பார்த்துவிட்டு சாதாரணமாக தான் இருந்தார். ஆனால் நில நிமிடங்களில் அவரது உடம்பில் விஷம் ஏறத்துவங்கியது. இதை உணர்ந்த அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கேட்டுள்ளார்.
உடனடியாக மக்கள் எல்லோரும் அவரை மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதை கேட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது பாம்பு கடித்த பலரின் உயிரை காப்பாற்றியவரே பாம்பு கடித்து இறந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாம்புக்கு ராக்கி கயிறு கட்டி முயன்றவரை பாம்பு கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவரை பாம்பு கடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
बिहार के सारण में बहन से साप को राखी बंधवाना महंगा पड़ गया साप के डसने से भाई की चली गई जान pic.twitter.com/675xsgnZ6N
— Tushar Srivastava (@TusharSrilive) August 23, 2021