இந்தியாவின் கேரள மாநிலத்தில் 25 வயதான யுவதியொருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இந்த யுவதியின் கணவனே பல மாதங்களாக திட்டமிட்டு அந்த யுவதியை பாம்பு தீண்டி உயிரிழக்கச் செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. மேற்படி பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றரை வயது குழந்தையின் தாயான 25 வயதான உதாரா எனும் யுவதியே பாம்பு தீண்டி உயிரிழந்தார்.
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அன்சல் எனும் பிரதேசத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டின் படுக்கை அறையில் கடந்த 7 ஆம் திகதி பாம்பு தீண்டியதால் உணர்விழந்த நிலையில் உதாரா காணப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டாhர் என மருத்துவர்கள் அறிவித்தனர்.
எனினும், இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என உதாராவின் பெற்றோர் குற்றம் சுமத்தினர்.
உதாரா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அயலவர்கள் மேற்படி படுக்கை அறையில் கிடந்த பாம்பை கண்டுபிடித்து கொன்றனர். அந்த படுக்கை அறையில் உதாராவின் கணவன் சூரஜ் மற்றும் ஒன்றை வயது மகன் ஆகியோரும் உறங்குவது வழக்கம்.
குளிரூட்டப்பட்ட அந்த அறையி;ல் சம்பவம் இடம்பெற்ற வேளையில் ஏ.சி. இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. அதாவது அடைக்கப்பட்ட அந்த அறைக்குள் பாம்பு எப்படி வந்தது என்பதில் உள்ளூர் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தனது மனைவியை பாம்பு கடித்ததை தான் அறியவில்லை என பொலிஸாரிடம் சூரஜ் முதலில் கூறினாராம்.
எனினும் பின்னர் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவ்வேளையில் உதாராவின் மரணம் தொடர்பில் அவரின் கணவர் சூரஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுமார் 2 மாத இடைவெளியில் இரு தடவைகள் உதாராவை பாம்பு கடித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் 2 அம் திகதி முதலில் உதாராவை பாம்பு கடித்தது. கேரளாவின் அடூர் நகரிலுள்ள சூரஜின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றது. அதில் உதாரா காயத்துடன் உயிர் தப்பினார்.
கடந்த அன்சல் கிராமத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு உதாரா சென்றிருந்தார்.
இந்நிலையில், மே 7ஆம் திகதி உதாராவை மீண்டும் பாம்பு கடித்தது. இரண்டாவது தடவை அவர் இறந்துவிட்டார்.
உதாராவை பாம்புகடித்த இரு சந்தர்ப்பங்களிலும்; உதாராவுடன் அவரின் கணவர் சூரஜும் அறையில் இருந்துள்ளார்.
உதாராவின் மரணம் தொடர்பில் அவரின் கணவர் சூரஜையும் அவரின் நண்பர்கள் சிலரையும் பொலிஸார் விசாரித்தபோது, இச்சம்பவத்துக்கு முன் பாம்பு விற்பiனாயளர்கள் சிலருடன் சூரஜ் தொடர்பு கொண்டிரந்தது தெரியவந்தது.
இரு பாம்புகளையும் வாங்குவதற்காக 10,000 ரூபாவை தான் செலவிட்டாக பொலிஸாரிடம் சூரஜ் ஒப்புக்கொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.
உதாரா தனது பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பிய 2 நாட்களின் பின் ஏப்ரல் 24 ஆம் திகதி இரண்டாவது பாம்பை அவர் கொண்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பை கட்டிலில் சுதந்திரமாக விட்டு, அப்பாம்பு தன் மனைவியை கடிப்பதை தான் பார்த்துக் கொண்டிருந்ததாக பொலிஸாரிடம் சூரஜ் ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரா உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின்னரே அவர் உதவிக்கு ஆட்களை அழைத்தார் என ஒப்புக்கொண்டதாவும் செய்திவெளியாகியுள்ளது.