இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதற்காக போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
வடக்கு ஈராக்கில் நிலைகொண்டு நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்த அமைப்பினர் அங்கு வசிக்கும் யசீதி இன பெண்களை கடத்திச் சென்று பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஈராக்கின் வட பகுதியிலுள்ள பாரிய சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்த பெண்கள் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு 25 முதல் 150 டொலர்களுக்கு அப்பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர். பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதற்கு முன்னர் அவர்களுக்கு சிறப்பு நிபுணர்களால் அழகு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட ஏராளமான யசீதி இனப் பெண்கள் அங்கு சிறைபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் அந்த அமைப்பிலுள்ளவர்களின் காமப் பசிக்கு இரையாகி சித்திரவதைகளை அனுபவித்து வருவதாகவும் தப்பி வந்த பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தி வரப்படும் யசீதி இனத்தோருக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று, இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் அல்லது பாலியல் தொழிலுக்கு சம்மதிக்க வேண்டும் என்பதாகும்.
இதேவேளை யசீதி இன ஆண்கள் பெரும் சித்திரவதைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். துப்பாக்கியால் தலையில் அடித்தும் மர்ம உறுப்புகள் மீது தாக்குதல் நடத்தியும் கொடுமைபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(தாக்குதலுக்கும் கடத்தலுக்கும் பயந்து இடம்பெயரும் மக்கள்)
யார் இந்த யசீதி இனத்தவர்கள்?
வடக்கு ஈராக்கில் பழங்குடிகளாக வாழ்ந்து வரும் யசீதிகள் தொன்மையான நாட்டுப்புற மரபுகளை கையாள்கின்ற போதிலும் கிறிஸ்தவ மதத்தோடு ஒத்திசைவான கொள்கைகளை பேணுகின்றனர்.
உலகைப் படைத்தவர் கடவுள் எனவும் தாம் படைத்த உலகத்தை காப்பதற்காக கடவுளானவர் ஏழு புனித தூதர்களை அனுப்பி வைத்ததாகவும் நம்புகின்றனர்.இளகிய மனமுடையவர்கள், பெண்கள் இவ் வீடியோகளை பார்ப்பதை தவிர்க்கவும்