அவர்களின் விருப்பத்தின்பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன்.
ஆசிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் வசித்தார். ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அங்கு சென்றபோது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது. அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது.
இந்த காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன். குர்மீத் ராம் இப்படிபட்டவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
எனக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
என்னுடைய மறுப்பை தெரிவித்தேன். ‘கடவுள்’ என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா? என கேள்வியை எழுப்பினேன்.
ஆனால் குர்மீத் ராம், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த காரணத்தினால் என்னை மிரட்டினார். என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
அவர்கள் குண்டர்களை வைத்துவிட்டு கொன்றுவிட்டு, சாட்சியே இல்லாமல் ஆக்கிவிடுவேன் என மிரட்டினார். அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல. என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம் செய்தார்.
அவர்களில் பலர் திருமண வயதை கடந்தவர்கள். அவர்களால் ஆசிரமத்தை விட்டு தப்பிச் செல்ல முடியவில்லை. அவரது விருப்பத்துக்கு இணங்காத பெண்களை துன்புறுத்துகின்றனர்.
எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினால் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்” என பெண் துறவி கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.