பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான நிலமையொன்று ஏற்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்படு செய்யப்பட்டது.
பிக்குகள், பெண்கள் என பலரையும் பொலிஸார் அள்ளிச்சென்றனர். இதனால், பெரும் பதற்றமான நிலைமையொன்று அவ்விடத்தில் ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்களை, பொலிஸார் சடுதியாக பிடித்து, பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.