ஒரு மாத காலம் வரையில் பிக்கு சிறுவனை பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக மொனராகலைப் பிரதேச விகாரை ஒன்றின் விஹாராதிபதி ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு மொனராகலை நீதிவான் நீதிமன்றம் 30 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் 75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் மேலும் 75 ஆயிரம் ரூபாவை பாதிக்கப்பட்ட பிக்கு சிறுவனுக்கு இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் மே மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாத காலமாக மேற்படி பிக்கு சிறுவனை மொனராகலை விஹாரையொன்றைச் சேர்ந்த விஹாராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார்.
மேற்படி குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட விஹாராதிபதி பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் மீண்டும் விசாரணைகளின் போது அவர் நீதிமன்றம் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து மேற்படி விஹாராதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஹாராதிபதி பிக்கு சிறுவன் தொடர்பான வைத்திய அறிக்கையின் பிரகாரம் குற்றவாளியாக அறியப்பட்டார். இதன் பின்னரே மேற்படி தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.