“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம்.
‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று போட்டியாளர்களிடம் முன்பு வாக்குத் தந்திருக்கிறேன். இதுவரைக்கும் யார் வெற்றியாளர் என்று எனக்கும் தெரியாது.
ஆனால் இப்ப தெரியும். வீட்டுக்குள் செல்கிறேன். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று சஸ்பெனஸ் வைத்து விட்டு சென்றார் கமல்.
“யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா?” என்கிற ‘விஸ்வரூப’ பாடல் பின்னணியில் ஒலிக்க, வெடிச்சத்தத்துடன் தீப்பொறிகள் பறக்க, கமலின் வருகை நிகழ்ந்தது. போட்டியாளர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றார்கள்.
வீட்டின் வாசலில் போட்டிருந்த வரவேற்பு கோலத்தைப் பாராட்டினார் கமல். அவரின் காலில் விழ சிலர் முயன்ற போது ‘விழாதீங்க.. ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டார் ‘சுயமரியாதை’யில் நம்பிக்கையுள்ள கமல்.
Part 01
Part 02
Part 03
Part 04
Part 05
“ஏதாவது சாப்பிடறீங்களா?” வேர்க்கடலை இருக்கு” என்று உபச்சாரம் செய்தார் சிநேகன். “கொடுங்க.. காந்தி சாப்பிட்டது” என்றார் கமல். (கூட எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம சாதாரணமாக பேசவே மாட்டீங்களா, ஆண்டவரே!) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார்.
கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும்.
இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க?” என்றார் கமல். வேர்க்கடலையையும் கொடுத்து விட்டு பேசச் சொன்னது நல்ல ஐடியா இல்லை. மைக்கில் சத்தம் வரும்.
“உங்களை பேச வெச்சு பார்க்கணும்னு ஆசைப்படறோம்” என்றார் பிந்து. (அடுத்த படத்தில் நிச்சயம் சான்ஸ் உண்டு). “சாப்பிட்டுக்கிட்டே எப்படி பேசறது? அப்படி செய்யக்கூடாதுன்னு சின்னப்புள்ளல இருந்து வளர்த்துட்டாங்க” என்றார் கமல்.
வையாபுரியின் மூக்கைப் பற்றி விசாரித்தார். (“நீங்க கிட்ட வாங்க.. மூக்கு இங்க வராது”) “அவருக்கு மூக்குல அடி. இவருக்கு மனசுல அடி” என்றபடி ஹரீஷை குறும்பாக பார்த்தார்.
பிக் பாஸ் வீட்டு அனுபவத்தைப் பற்றி வையாபுரியிடம் விசாரித்தார். “இப்ப தெளிவா இருக்கேன் சார்.. இது வரைக்கும் நெறய தப்பு பண்ணியிருக்கேன். இந்த 84 நாள்லதான் அதெல்லாம் புரியது.
அது வரைக்கும் புரியலை” என்றார் வையாபுரி. “எல்லோருக்கும் அவங்க தப்பு பண்றது தெரியும். சிலர் தெரியாம மறந்துடுவாங்க. அவங்க மூக்கு மாதிரி..
அவங்களாலேயே பார்க்க முடியாது” என்றார். அவரவர்கள் பிக் பாஸ் வீடு ஏற்படுத்திய மாற்றத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். “நான் தப்பு செஞ்சா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுது” என்றார் சிநேகன்.