தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இரு அச்சகங்கள் உள்ளிட்ட சொத்துக்களே இவ்வாறு ஏலமிடப்படவுள்ளன.
அத்துடன், கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டு வங்கியொன்றின் கணக்கிலிருந்த 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தேசிய வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ள மூன்று கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் ஆகியனவும் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தை, திறைசேறிக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
• தமிழீம் அமைக்க வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கூடுதலான பேர் வழிகள் கொழும்பில்தான் (தமிழீழம் அமைத்துள்ளார்) வீடுவாங்கியுள்ளார்கள். அதுவும் குறிப்பாக வெள்ளவத்தளையில்.
பிரபாகரனுக்கு வெள்ளவத்தளையில் மாடிக்கட்டிடம் எதற்கு? அங்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் தங்கி வாழ இருந்தாரோ?
புலம்பெயர் தேசங்களில் புலிப்பினாமிகள் வைத்திருக்கும் பணங்கள் எத்தனை கோடி? அவற்றை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பி கொடுப்பார்களா?