பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் தென்பகுதி நகரமான ரோமர் சுர் இசரேயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெதுப்பகமொன்றிற்கு வெளியே நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சூடானை சேர்ந்த நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் அவர் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெதுப்பகத்திற்குள் நுழைவதற்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீதே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.