நமது தமிழ் பெண்களை இவர்களை பார்த்து வெட்கி தலைகுனிந்து நின்றார்களாம்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட பெண் போலீஸ் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரிகளை பார்த்து பலர் வியந்துள்ளனர், அத்துடன் நம் தமிழ் மாடல் அழகிகளை பார்த்து பலர் கேள்வியும் கேட்டுள்ளனர்.
பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிகள், தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.
இதனை பார்த்து தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்து செல்ல விரும்பாத சில தமிழ் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் புரிந்துகொள்ளவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது பல வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்துநின்றனர் என்பது குறிபிடதக்கது..