பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பியாரிட்ஸ் நகரானது, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் உறங்கியுள்ள நிலையில் அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பது தெரியாத ரெயில் ஓட்டுனர் ரெயிலைச் செலுத்தியுள்ளார்.
.இதனால் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ள நிலையில், நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.