பிறந்து ஐந்து நாட்கள் மட்டுமேயான சிசுவை வீதியில் வீசிச் சென்ற தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய், சிசுவை நேற்று (19) பலாங்கொடை வைத்தியசாலையின் முன்னுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
இதன் பின்னதாக விசாரணைகளை மேற்கொண்ட பலாங்கொடை பொலிஸார் சிசுவின் தாயாரை கைது செய்துள்ளனர்.
வேவெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாரதியின் தூக்கக் கலக்கத்தால் கங்கையில் விழுந்த வேன் – ஐவர் பலி
19-04-2014
கதிர்காமம் – தெடகம கங்கையில் விழுந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டியில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற குறித்த வேன், இன்று அதிகாலை 5.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் தூக்கக் கலக்கத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்களும் பலியாகியுள்ளதோடு, சுமார் ஐந்தரை வயது குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுமியை கடத்திச் சென்ற இளைஞனுக்கு விளக்கமறியல்
19-04-2014
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்துவைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேரந்த 10ஆம் ஆண்டில் கல்விப்பயின்று வரும் 14 வயது நிரம்பிய உறவினர் வீடொன்றை இருந்து கல்விபயின்று வந்தவேளை திருக்கோவில் பிரதேச பிரிவில் உள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய வீதியைச் சோ்ந்த 18 வயதுடைய இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 15ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறித்த இளைஞர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தையார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடுசெய்ததையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சிறுமியை மறைத்து வைத்திருந்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச் சம்பவத்தில் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.