புதிய சட்டமா அதிபராக பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தின் பெயர் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரால் இவரின் பெயர் பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறவுள்ளது.
இதேவேளை, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா எதிர்வரும் 24 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.