விடுதலைப் புலிகளின் படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 இளைஞர்கள் மானிப்பாயில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோனையில் இரண்டு இளைஞர்களின் கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகள் தொடர்புடைய படங்கள் இருப்பதாக கூறி, மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்.