இதன்படி பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகியKaruna prabha split இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 பேர்கள் வடக்கில் முக்கியமான நிலைகளில் அமர்த்தப்பட்டிருப்பதால், தவறான வகையில் கையாளப்பட்டால் ஒரு பிராந்திய பிளவின் உடனடி எதிர்விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.
கிழக்குப் பகுதி அங்கத்தவர்களை முற்றாக சுத்திகரிப்புச் செய்தால் வடக்கில் இயங்கும் பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகளும் செயற்படாமல் முடங்கிவிடும். அதேநேரத்தில் அவர்களை வடக்கில் முக்கியமான சேவைகளில் தொடர்ந்து வைத்திருந்தால் முக்கியமான பாதுகாப்பு இடர்கள் ஏற்படக்கூடும்.
இந்த அங்கத்தவர்களை சதா காலமும் தனிமைப்படுத்தி வைக்கவும் முடியாது. எனவே பிரபாரனுக்கு கிடைக்ககூடியதாக உள்ள சாத்தியமான வழி அவர்களை போராட்டத்தில் இறக்கி அவர்களது பிராந்திய சகோதரர்களுடன் போராடி அவர்களது விசுவாசத்தை நிருபிக்கும்படி கேட்பதுதான்.
இராணுவ ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் கிழக்கில் கருணாவுடன் போராட வடபகுதி போராளிகளை பயன்படுத்த பிரபாகரனால் இயலாமலும் மற்றும் விருப்பமில்லாமலும் இருந்தது.
இந்தப் பணிக்காக கிழக்குப்பகுதி அங்கத்தவர்களை அனுப்பவே அவர் விரும்பினார், ஏனெனில் அவர்கள் அந்த நிலப்பகுதி பற்றி நன்கு அறிவதுடன் மற்றும் அரசியல் எதிர் விளைவுகளும் குறைந்த ஆபத்துள்ளனவாக இருக்கும். வடபகுதி போராளிகள் கிழக்குப் பகுதியினருடன் போராடி அவர்களைக் கொல்வது, கிழக்குப் பகுதி முழுவதையுமே வடக்கில் இருந்து அந்நியப்படுத்தி விடும். எனவே கிழக்கு எதிர் கிழக்கு மோதலை உருவாக்குவதே பிரபாகரனுக்கு முக்கியமாக இருந்தது.
கருணாவின் கிளர்ச்சிக்குப் பிறகு கிளிநொச்சியின் பக்கமிருந்த மட்டக்களப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் சட்டபூர்வமான கிழக்கு புலித் தலைவர்களாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார்கள்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிக்கும் விசேட தளபதியாக ரமேஸ் நியமிக்கப்பட்டார். அதேவேளை ராம் இராணுவ தளபதியாகவும் பிரபா துணை இராணுவ தளபதியாகவும் நியமனம் பெற்றனர். ரமணன் இராணுவ புலனாய்வு தலைவராகவும் மற்றும் கௌசல்யன் அரசியல் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த மாறுதல்களுக்குப் பிறகு கருணாவும் தனது மூத்த அதிகாரிகளை மாற்றியமைத்தார். ரபாத் மூத்த இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அதேவேளை ஜிம் கெலி தாத்தா மற்றும் விசு ஆகியோர் முறையே பிரதி இராணுவ தளபதி மற்றும் அரசியல் தலைவர்களாக நியமனம் பெற்றார்கள்.
புதிய நிருவாகத் தலைவராக துரையும் மற்றும் பெண்கள் படையணி தளபதியாக நிலாவினியும் நியமிக்கப் பட்டார்கள். பெண்கள் அரசியல் பிரிவின் தலைவராக பிரேமினியும் பதிய அம்பாறை மாவட்ட தலைவராக பாவாவும் நியமிக்கப்பட்டார்கள். பின்னர் பாவா மற்றப்பகுதிக்கு கட்சி தாவினார்.
பிளவு ஏற்பட்ட சமயத்தில் மொத்த கிழக்கு அங்கத்தவர்கள் 7,500 பேரில் 5,700 பேர் மட்டக்களப்பு மற்றம் அம்பாறையில் இருந்தார்கள். ஜெயந்தன் படையணியின் இரண்டு பிரிவுகளை கருணா தனது கட்டளையின் கீழ் வைத்திருந்தார்.
விசாலழகன் மற்றும் வினோதன் ஆண்கள் படையணியும் மற்றம் அன்பரசி மற்றும் மதனா பெண்கள் படையணியையும் மற்றும் ஜோண்சன் பீரங்கிப் படைப் பிரிவையும் கருணா தனது கட்டளையின் கீழ் வைத்திருந்தார்.
கிழக்குப்பகுதி அதிகாரிகள் பணிநிலையாளர்கள் அனைவரும் பாலேந்திரா அதிகாரிகள் பணிநிலை பயிற்சிக் கல்லூரியில் இருந்து சித்தியடைந்து வெளிவந்தவர்கள். கிட்டத்தட்ட கிழக்கிலிருந்த அனைத்து நடுத்தர மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் கருணாவுக்கு கடமைப்பட்டவர்களாக இருந்தார்கள்.
அவருக்கும் கனரக பீரங்கி ஆயுதங்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆரம்பத்தில் இந்த பெரிய சுடுகலன்கள் யாவும் கிழக்கினுள் நகர்த்தப்பட்டது எப்போதாவது ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் யுத்தம் வெடித்தால் மட்டக்களப்பு நகர முகாம், வீச்சுக்கல்முனை – புதூர் வளாகம் மற்றும் வவுணதீவு மற்றும் கல்லடி முகாம்களில் நிறுத்துவதற்காகவே.
இப்போது அவை திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரைகளில் பிரதான பகுதி புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து நிறுத்தப்பட்டிருந்தன.
திருகோணமலை
காலம் கனியும்போது மட்டக்களப்பு மீதான ஆக்கிரமிப்பை தலைமையேற்று நடத்துவதற்கு பிரபாகரன் பிரதானமாக தங்கியிருந்தது திருகோணமலையை சேர்ந்த மூத்த தளபதி சொர்ணத்திலேயே. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் சொர்ணம் முகாம் அமைக்க ஆரம்பித்தார்.
முதலைகள் நிறைந்துள்ள அந்த ஆறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லையாக பிரிக்கிறது. வெருகல் ஊடாக ஒரு ஆக்கிரமிப்பு நடப்பதை தடுப்பதற்காக கருணா 800 போராளிகளை மாவடிச்சேனை பகுதியில் நிறுத்தியிருந்தார். கருணாவின் சகோதரர் றெஜியின் கட்டளையின் கீழ் அந்த தற்காப்பாளர்கள் இயங்கினார்கள்.
அதற்கு மேலதிகமாக கருணாவின் அங்கத்தவர்கள் கடல்வழியான ஆக்கிரமிப்பு உருவாகலாம் என எதிர்பார்த்து வாகரை, களுவன்கேணி, பனிச்சன்கேணி கடற்கரைப் பகுதிகளிலும் மற்றும் மட்டக்களப்பின் வடக்கு பகுதியில் உள்ள ஏனைய கடலோரப் பகுதிகளையும் காவல்காத்து வந்தனர்.
கிழக்குப் பகுதியிலுள்ள மூன்று கடலோர புலி முகாம்களான வாகரை, பால்சேனை மற்றும் சாலைத்தீவு ஆகியனவும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
மாவட்டத்துக்குள் வரும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிளைச் சாலைகள் யாவும் காவல் காக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய வாகனங்கள் மற்றும் பயணிகள் என்பன சோதனையிடப்பட்டன.
உட்பகுதியின் முக்கிய வீதிகள் கூட தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானின் ஆட்களின் ஊடுருவல் இருக்கலாம் என கருணா அஞ்சினார்.
இரகசியமான வழிகளுடாக பெரிய அளவில் ஆக்கிரமிப்பு இடம்பெறலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் காட்டு வழியூடாக இணைக்கும் பிரபலமான மூன்று வழிகளான “பெய்ரூட் பாதை”யும் கண்காணிக்கப்பட்டது. கூடியவரையில் மட்டக்களப்பை மூடி முத்திரை வைத்துவிட்டதாக கருணா நம்பிக்கை கொண்டார்.
தன்னையும் சிறிதளவு மேலும் பாதுகாப்பதற்காக கருணா, பிரதான எல்.ரீ.ரீ.ஈயkaruna kuveniுடன் நெருங்கிய தொடர்புள்ள அநேக நபர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றினார். எல்.ரீ.ரீ.ஈ நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், வரியிறுப்பு அலுவலகங்கள், புலனாய்வு மற்றும் நிருவாகப் பிரிவுகள் என்பனவற்றை அவர் மூடினார்.
அங்கு பணிபரிந்த வட பகுதி தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்த நடவடிக்கையில் பல கல்விமான்கள் மற்றும் கிழக்கு பகுதியில் இருந்த மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கிழக்கைவிட்டு வெளியேற்றப் பட்டார்கள்.
அநேக யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் சில தொழில் நிபுணர்களும் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். ஏனையவர்கள் அச்சம் காரணமாக தாங்களாகவே வெளியேறினார்கள்.
வன்னி எல்.ரீ.ரீ.ஈயினர்மீது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரம் என கருணா இதை நியாயப்படுத்தினார். எனினும் அத்தகைய நகர்வுகள் மட்டக்களப்பில் இருந்த வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இராணுவ முன்னிலையில் இருந்து பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியருப்பதை கருணா உணர்ந்தார். மொத்தமாக கிழக்கில் இருந்த 5,700 அங்கத்தவர்களில் 2,000 பேர்கள் இளையவர்களும் அனுபவமற்றவர்களும் ஆவார்கள்.
அவர்களில் பெரும்பகுதியினர் யுத்த நிறுத்தத்தின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் அல்லது கட்டாய இராணுவ சேவைக்காக பிடித்து வரப்பட்டவர்கள், மற்றும் அவர்கள் யுத்தத்தை பார்த்தது கிடையாது. சுமார் 1,000 வரையான கருணாவின் அங்கத்தவர்கள் இந்த உள்ளக முரண்பாட்டில் தாங்கள் நடுநிலை வகிக்க விரும்புவாகச் சொல்லி தற்காலிகமாக எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுவதாகத் தெரிவித்தார்கள்.
அவர்களை ஒரு கட்டாயமான போரில் திறமையாக ஈடுபடுத்த முடியாது என்பதை அறிந்து கொண்ட கருணா, கட்டாயப்படுத்தி அவர்களை போராட வைப்பதைக் காட்டிலும் அவர்களை போகவிடுவது நல்லது என்பதை தெரிவு செய்ய வேண்டியவரானார்.
சுமார் 200 வரையான அங்கத்தவர்கள் கிழக்கிலிருந்து வடக்கிற்கு தப்பியோடிவிட்டார்கள். புதியதும் இளையவர்களுமான பெண் ஆட்சேர்ப்பாளர்கள் 500 பேரை கருணாவும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
அவர்களை ஒரு ஒதுக்கீடாக வைப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது. தேவை ஏற்பட்டால் அவர்களை போராட்டத்துக்கு அழைக்கப்படும் என அவர்களிடம் கூறப்பட்டது.
தற்சமயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதால் அவர்களுக்கு உணவளித்து பராமரிக்கும் நிதிச்சுமை குறையும். கிழக்கு புலி அங்கத்தவர்களில் ஆண் மற்றும் பெண்களிடையான விகிதாச்சாரம் அப்போது மூன்றுக்கு இரண்டு என்கிற விகிதத்தில் இருந்தது.
(சகோதரத்துவம்
கருணாவின் பிரச்சினை இரத்தம் சிந்தாமல் தீர்த்து வைக்கப்படும் என்கிற பிரபாகரனின் முந்தைய உறுதிமொழிக்கு மாறாக பெரும்பாலான கிழக்குத் தமிழர்கள் இரத்தக் களரிக்கான வாய்ப்புகள் திட்டமிடப்பட்டு வருகின்றன என்று கவலைப்பட்டார்கள்.
இதன் காரணமாக ஒரு சகோதர யுத்தத்தை தவிர்க்கும்படி ஏராளமான உள் அழுத்தங்கள் கருணா மீது செலுத்தப்பட்டது, இதுகூட பிரபாகரனுக்கு சாதகமாக அமைந்தது.
கிளாச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய பெரும்பாலான நேர்காணல்களில் கருணா எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏளனம் செய்ததுடன், புலிகளின் முந்தைய வெற்றிகள் அனைத்துக்கும் பின்னாலுள்ள இராணுவ மேதை தான்தான்(கருணா) என தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொண்டார்.
ஆனால் உண்மையான கிழக்குப் போராட்டம் நடந்தபோது அந்த மோதலின் போக்கு, உண்மையில் இரண்டு பேரில் பிரபாகரன்தான் சாமர்த்தியமான இராணுவ மூலோபாயத்தை கொண்டவர் என்பதை நன்கு விளக்கியது.
பிளவுக்குப் பின்னர் தனது மொத்த படைகளையும் மட்டக்களப்பு வடக்கு கோரளைப்பற்று பிரிவில் குவிப்பதிலேயே கருணா கவனம் செலுத்தினார்.
முன்பு குறிப்பிட்டதைப்போல மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லையாகவுள்ள வெருகல் ஆற்று வழியாக இடம்பெறும் ஒரு ஆக்கிரமிப்பையே அவர் எதிர்பார்த்தார். அந்த ஆற்றின் தென் பகுதியில் கருணா தனது எல்லைக் கோட்டை நிறுவிக்கொண்டார்.
கருணா ஆரம்பத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வரும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் மற்றும் கடலோரப் பகுதிகளையும் காவல்காத்து வந்தார். பின்னர், அவர் வீதிகள் மற்றும் கடற்பகுதிகளில் இருந்த தனது காவலை தளர்த்திக் கொண்டார், ஏனெனில் பெருமளவிலான புலிகள் அங்கத்தவர்கள் மற்றும் ஆயுதங்களின் நகர்வு ஒரு யுத்த நிறுத்த மீறலாக கருதப்படும்.
தவிரவும் அத்தகைய நகர்வுகள் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள வலயங்கள் ஊடாகவே நடத்தப்பட வேண்டும். பரந்துபட்ட அம்பாறை மாவட்டத்தை கிட்;டத்தட்ட பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாகவே அவர் விட்டுவிட்டார்.
மட்டக்களப்பை பொறுத்தவரை கருணா பிரதானமாக செங்கலடிக்கு வடக்கே உள்ள பிரதேசம், கடலேரியின் மேற்கு கரையோரமாக உள்ள சில பகுதிகள் மற்றும் தறவை – குடும்பிமலை பிரதேசம் ஆகியவற்றை வலுப்படுத்துவதிலேயே கவனம் எடுத்துக் கொண்டார். இது அவரது பாதுகாப்பில் பல ஓட்டைகளை ஏற்படுத்தியது.
இரண்டு மூன்று பேர்களாக இந்தப் பிரதேசங்களுக்குள் ஊடுருவுவதற்கு ஏற்றபடி எல்.ரீ.ரீ.ஈ இவற்றை மிக நுணுக்கமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல புலனாய்வுப் பிரிவை சேர்ந்த அநேக அங்கத்தவர்கள் இரகசியமாக நுழைந்தும் விட்டார்கள். பயிற்சி பெற்ற எல்.ரீ.ரீ.ஈயின் சிறுத்தை கமாண்டோக்கள் சிலரும் அப்படியே உள்ளே வந்தார்கள். இதன்டி சக்திவாய்ந்த ஒரு ஐந்தாம்படை உருவாக்கப்பட்டது.
இறுதி
2004 மார்ச் 25ம் திகதி ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் கருணாவுடனான யுத்தத்தை எல்.ரீ.ரீ.ஈ பிரகடனம் செய்தது. தமிழில் வெளியான அந்த அறிக்கையில் “எங்கள் தேசத்தையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணை விட்டு அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுளள்ளது.
கருணாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஓழுங்காற்று நடவடிக்கையை எதிர்க்கும் எவரும் எங்கள் பாதைக்கு எதிரான துரோகிகளாக கருதப்படுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் இறுதி முடிவு வழக்கமான எல்.ரீ.ரீ.ஈ பாணியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பயங்கரவாதமாக இருந்தது.
மார்ச் 26ல், விசையுந்துகளில் வந்த புலிகளின் கைத்துப்பாக்கி பிரிவினர் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரான தெய்வநாயகம் திருச்செல்வத்தை மாரியம்மன் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் காயப்படுத்தினார்கள். விவசாய பீடத்தில் பதில் பீடாதிபதியாக கடமையாற்றி வந்த 41 வயதான இவர் கருணாவின் வலிமையான ஒரு ஆதரவாளர் ஆவார்.
63 வயதான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி, மார்ச் 27ல் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகரையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுவிட்டு திரும்பும்போது, பிள்ளையாரடியில் வைத்து கைத்துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதரால் சுடப்பட்டார். மட்டக்களப்பு தமிழரான மௌனகுருசாமி கருணாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டார்.
மட்டக்களப்பு பேரூந்து நிலையத்தில் தேனீர் கடையொன்றை நடத்தி வந்த 48 வயதான வேலுப்பிள்ளை கணேஷ் என்கிற தேனீர்கடை உரிமையாளர், மார்ச் 29ல் மிகக் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவர் கருணாவின் கிராமமான கிரானைச் சேர்ந்தவர், தனது கடையின் முகப்புக்குப்; பின்னால் கருணாவின் மிகப பெரிய படம் ஒன்றை அவர் காட்சிப்படுத்தியிருந்தார்.
கருணாவின் ஆதரவாளரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான பேரின்பராஜா சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துரான 47 வயதான கந்தையா கனகசபை ஆகிய இருவரும் மார்ச் 31ல் தங்கள் காலைப் பூஜையை முடித்துக்கொண்டு சாமி அறையை விட்டு வெளியில் வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ரி.என்.ஏ வேட்பாளர் பொதுவாக ராஜன் சத்தியமூர்த்தி என அழைக்கப்படுவதுடன் கருணாவின் நெருங்கிய தோழரும் மற்றும் அரசியல் ஆலோசகரும் எனக் கருதப்பட்டவர். தாண்டவன்வெளியில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த புலிகள் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்கள்.
கருணா சத்தியமூர்த்திக்காக ஒரு மிகப் பிரமாண்டமான மரணச்சடங்கை நடத்தி, அவரது உடலை தாண்டியடியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயின் மாவீரர்களுக்கான மயானத்தில் புதைத்தார். அன்றைய இரவு பிரதான பகுதி எல்.ரீ.ரீ.ஈ அந்த இடத்துக்குச் சென்று அவரது உடலை தோண்டி எடுத்து அதை வாவிக் கரையில் வைத்து எரித்துவிட்டார்கள்.
புலிகள் பிரேதத்தை அசுத்தமாக்கி விட்டார்கள். மறுநாள் காலை பாதி எரிந்த உடலை மீட்ட கருணா மரியாதையுடன் அதை வேறு இடத்தில் அடக்கம் செய்தார். ராஜன் சத்தியமூர்த்தியின் மகள் சிவகீதா பிரபாகரன் பின்னாளில் மட்டக்களப்பின் முதல் பெண் மேயராக ஆனார்.
(தொடரும்)
– டி.பி.எஸ் ஜெயராஜ்