ஆணாகயிருப்பதைவிட பெண்ணாக இருப்பதை பெரிதும் விரும்பிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை மாற்றியமைத்து விபசாரிகளுடன் பழகி பின்னர் கொலைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளமை பத்திரிகைகளில் வெளிவந்தன.
ஹோமாகமை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து கம்பீரத்தோற்றத்துடனான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்ற பிரிவுப் பொறுப்பதிகாரி முன் கொண்டுவரப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஹோமாகமை பிரதேசத்தில் நடைபெற்ற கொலை தொடர்பான தகவலைப் பெறுவது பொறுப்பதிகாரியின் நோக்கமாகும்.
ஹோமாகமை கடுவாளனயிலுள்ள தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளாரென அத்தொழிற்சாலையில் கடமையாற்றும் விஜேரத்ன என்பவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தார். பொறுப்பதிகாரி சந்திரசேகர சம்பவ இடத்துக்கு சென்றபோது குளியலறையில் சடலம் காணப்பட்டது.
இறந்திருப்பவர் உபாலி நயனானந்த என்னும் வேறொருவரின் குளியலறையில் சடலம் காணப்பட்டது. சந்தேகத்துக்கிடமாயுள்ளதாயும் தெரியவந்தது. சடலம் காணப்பட்ட அறையில் தங்கியிருப்பவர் ‘நியோன்’ என்றும் தொழிற்சாலை உரிமையாளரின் சகோதரியின் மகனென்றும் பொலிஸார் அறிந்தனர்.
காலையில் தொழிற்சாலை கேட் திறந்திருந்தது லொறியையும் நியோனையும் காணப்பட வில்லையென முறைபாடு செய்தவர் தெரிவித்தார். நியோன் தலைமறைவாகியிருப்பதாக தெரியவந்தது.
மஜிஸ்திரேட் வை.ஆர்.பீ.நெலும் தெனியவின் விசாரணையையடுத்து, களுபோவில சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணை நடத்தினார். கூர்மையற்ற ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு தலைபகுதியும் மூளையும் பாதிக்கப்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறந்த உபாலி நயனானந்த ரம்புக்கனையை சேர்ந்தவர் ஹோமாகமை குலசிறி மாவத்தையில் வாடகை வீட்டில் வசிப்பவர். கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை உபாலியும், விஜேசேனவும் கடமையிலிருந்தனர்.
இரவு பத்து மணிக்கு பின்னர் விஜேசேனவும் கடமையிலிருந்தார். இரவு பத்து மணிக்கு பின்னர் விஜேசேன நித்திரைக்கு சென்றார். உபாலி கடமையிலிருந்தார். காலையில் விஜேசேன விழித்ததும் உபாலி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தலைமறைவாகியுள்ள நியோன் பற்றி பொலிஸார் தகவல் தேடினர். தனவந்தரின் ஒரே மகனான நியோன் சர்வதேச பாடசாலையில் கற்றதால் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவராய் இருந்தார். நியோனின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்துவந்தனர்.
நியோனின் தாயின் சகோதரர் இவரை பராமரித்து வந்தார். நியோனுக்கு தொழிற்சாலையில் அறையொன்றும் வழங்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை லொறியை பொலிஸார் தேடியபோது மொறட்டுவை கடற்கரை பிரதேசத்தில் அது காணப்படுவதாக தகவல் கிடைத்ததும் அங்கு இவர் கைது செய்யப்பட்டார்.
உபாலியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பியையும் பொலிஸார் கைப்பற்றினர். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் தயாரானபோது, பொலிஸ் பரிசோதகர் ரணபாஹுவுக்கு நண்பரொருவர் மூலம் பின்வருமாறு தகவல் கிடைத்தது.
சர், இப்போது நீங்கள் கைது செய்துள்ளவர் இன்னுமொரு கொலையிலும் சம்பந்தப்பட்டவர். இவர் ஆண்போன்று தோற்றமளித்தாலும் இவர் ஒரு பெண் என்றதும் பொலிஸார் வியப்படைந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் மேலும் இரண்டு நாட்கள் விசாரணை செய்யப்பட்டார். ஹோமாகமை தொழிற்சாலை உரிமையாளருக்கு நுகேகொடை சுனேத்ராதேவி வீதியில் தொழிற்சாலையொன்றிருந்தது.
இத்தொழிற்சாலையின் முதலாம் இலக்க அறையில் நியோன் தங்கியிருந்தார். அங்குள்ள அறையொன்றில் காவலாளி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அப்போது நியோன் சந்தேக நபராக காணப்பட்டு மிரிஹானை பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டார். சாட்சியங்களில்லாததால் நியோன் விடுவிக்கப்பட்டார்.
நியோன் ஒரு பெண் என அக்காவலாளி அறிந்துள்ளார். இதனை எவரிடமாவது சொல்வார் என எண்ணிய நியோன் அவரது கழுத்தை வெட்டி கொன்றார். இவ்விரண்டு கொலைகளையும் தான் செய்ததாக நியோன் ஒப்புக்கொண்டார்.
நியோன் ஒரு பெண் என்று கூறியதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள பொறுப்பதிகாரி அவளது மேல் சட்டையை அகற்றுமாறு பணித்தார். வெட்கப்பட்ட நியோன் ஒருவாறு மேல் சட்டையை அகற்ற பொறுப்பதிகாரி அதிர்ச்சியடைந்தார்.
அவரக்கு பெண்கள் போல் மார்பகங்கள் காணப்பட்டன. இதர ஆடைகளையும் அகற்றுமாறு பொறுப்பதிகாரி கேட்க அவரும் அகற்றினார். முழு உடலும் பெண்ணைப்போலவே இருந்தது. நீ ஆணா பெண்ணா விபரத்தை கூறு என்றார் பொறுப்பதிகாரி.
சர், நான் பெங்கொக் நகருக்குச் சென்று என்னை பெண ணாக மாற்றிக் கொண்டேன். என் அந்தரங்க உறுப்பும் பெண்ணாக மாற்றப்பட்டது. இதற்காக ஐந்து இலட்சம் ரூபா செலவழித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன்.
“ஏன் இப்படிச் செய்தாய் உனக்கென்ன பைத்தியமா” என்று பொறுப்பதிகாரி கேட்டதற்கு, பெங்கொக் நகரில் அழகான பெண்களுள்ளனர். அவர்களுடன் இருக்க வேண்டு மென ஆசைப்பட்டேன். சிகிச்சையின் பின் அவர்களுடன் ஒன்றாயிருந்தேன்.
2004ஆம் ஆண்டு பெங்கொக் நகரில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பின் நான் படிப்படியாக பெண்ணாக மாறினேன். இதற்கு ஹோமோன் ஊசி மருந்து பயன்படுத் தப்பட்டது. அங்குள்ள விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டேன். என்னை அவர்கள் ‘லீலா’ என்றழைத்தனர்.
காலப்போக்கில் போதை பொருள் பாவனைக்கு அடிமையா னேன். விபச்சாரிகளுடன் தொடர்பு கொண்டதால் என்னை சில ஆண்களும் பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறு ஐந்து ஆண்டுகள் வரை பெங்கொக்கில் காலத்தை கழித்த நான் மீண்டும் இங்கு வந்தேன். என் பெற்றோர் விபத்தில் அகால மரணமடைந்தனர்.” என்று கூறினான் நியோன்.
பெண்ணுக்குரிய உறுப்புக்களை பிறர் காணாதவாறு மறைப்பதற்கு நான் பெரும் பிரயத்தனமெடுக்கவேண்டியிருந்தது. மார்பகம் பெரிதாயிருந்ததால் மேல்சட்டை அணிந்து அதனை மறைக்க முடியவில்லை.
என் உறுப்புக்களை எவரும் நோட்டமிடுவதை நான் விரும்பவில்லை. அதைபற்றி பேசுபவர்களை நான் வெறுத்தேன். இந்நிலையில் நுகேகொடை தொழிற்சாலையின் காவலாளி என் உறுப்புக்களை கண்டதால் இவன் எனக்கு பிரச்சினையாயிருந்தான். கோபமடைந்த நான் கையில் கிடைக்கும் ஆயுதத்தினால் தாக்கினேன். அவன் இறந்துவிட்டான்.
கோபம் தனிந்ததும் தான் செய்த குற்றத்தை உணர்ந்த நியோன் வருந்துவண்டு. மொறட்டுவை கடற்கரை பிரதேசத்தில் லொறி கைப்பற்றப்பட்டது. அங்குள்ள கற்பாறையின் மேல் அமர்ந்திருக்கையில் நியோன் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகமை பிரதான மஜஸ்திரேட் நெலும்தெனிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, கொழும்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிங்கவின் மேற்பார்வையில் நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்வின் விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கிரிசாந்த, ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் பரிசோதகர் லலித் லீலாரத்ன, குற்ற பிரிவின் பொறுப்பதிகாரி வி.ஜி.சந்திரசேகர, நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி அசோக ரணபாஹு உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்