காலி , தங்கெதர சமகிவத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று பெண்ணொருவரை மோதிய சம்பவத்தின் காணொளி அருகில் இருந்த வீடொன்றில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்தோர் காயமடைந்து சுயநினைவற்ற நிலையில் இருந்த அப்பெண்ணை ஏற்றிச் சென்றபோதிலும் பின்னர் அவரை நடுவில் எங்கோ போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் வேறு சில இளைஞர்கள் அப்பெண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த நிலையில் அவர் சுகயீனம் அடையவே அவரை பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவர் அவசரசிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாத்திமா சர்மிளா என்ற 19 வயது பெண்ணுக்கே இக்கொடுமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமது பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.