பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் 24வயது இளைஞர் ஒருவர் கயிற்றினால் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 06.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் எவரும் இல்லாத வேளையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீற்கபட்ட இளைஞன் ஆறுமுகம் சத்தியராஜ் என்று தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞனின் மரணத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரனைகளை ஆரம்பித்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.