சுதந்திரக் கட்சி, தமிழ் கூட்டமைப்பின் மனுக்கள் தலா இரு இடங்களிலும் மு.கா., ஐ.ம.கூ., கூட்டணியின் மனுக்கள் ஒவ்வொரு இடத்திலும் நிராகரிக்கப்பட்டன
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்த லில் 93 உள்ளாட்சி சபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் பல தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக் கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெர முனவின் ஆறு மனுக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் வேட்பு மனுக்களும் சில பகுதிகளில் நிராகரிக்கப்பட்டன.
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் கால அவகாசம நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இறுதித் தினமான நேற்று பிரதான கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் ஆறு வேட்பு மனுக்களும், கைச் சின்னத்தைக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு வேட்பு மனுக்களும், வீட்டுச்சின்னத்தைக்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் இரு வேட்புமனுக்களும், உதய சூரியன் சின்னத்தைக்கொண்ட தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு வேட்புமனுவும், மரச் சின்னத்தைக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வேட்புமனுவும், மயில் சின்னத்தைக்கொண்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஒரு வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, அகலவத்தை, பதுளை, பாணந்துறை, மஹியங்கனை, மஹரகம, வெலிகம ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
அம்முன்னணி மஹகரகம நகர சபைக்கு தாக்கல் செய்த வேட்புமனுவில் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அவ்வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசசபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் பிரதிநித்துவம் போதுமானதாக அமையாமை மற்றும் கையொப்பமிடப்பட்டபோதும் உரிய நபரின் பெயர் குறிப்பிடப்படாமைமயினால் அவ்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அகலவத்தை பிரதேச சபை மற்றும் பாணந்துறை நகர சபைக்காக தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனு உரிய முறையில் உறுதிப்படுத்தப்படாமையினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வெலிகம நகர சபைக்கு அம்முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுவானது, வேட்புமனு தாக்கல் செய்வற்கு அனுமதியளிக்கப்பட்ட முகவரூடாக தாக்கல் செய்யப்படாமையினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுன குறித்த 93 உள்ளூராட்சி மன்றங்களில் 84 மன்றங்களுக்கு தாமரை மொட்டு சின்னத்திலும் ஏழு உள்ளூராட்சி மன்றங்களுக்கு படகு சின்னத்திலும் இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுயேட்சைக்குழுவாகவும் களமிறங்குவதாக வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பதியத்தலாவ மற்றும் தெஹியத்தே கண்டி பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலையடிவேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்காக இலங்கை தமிழரசுக்கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவ்வேட்புமனுக்களை அனுமதியளிக்கப்பட்டுள்ள முகவரூடாக தாக்கல் செய்த் தவறியமையினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன.
உதய சூரியன் சின்னத்தைக்கொண்ட தமிழர் விடுதலை கூட்டணி கிழக்கு மாகணத்தின் வாழைச்சேனை, கோரளைப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்காக தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கப்பட்ட முகவரூடாக வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தவறியமையினாலேயே அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான வேட்புமனு, வேட்புமனு தாக்கல் செய்வற்கு ஒதுக்கப்ட்ட காலக்கெடுவில் தாக்கல் செய்யத் தவறியமையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயில் சின்னத்தைக்கொண்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று மாநகரசபைக்கு தாக்கல் செய்த வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் கட்சி செயலாளரின் கையொப்பம் இன்மையினை அடிப்படையாகக்கொண்டே அம்மனு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு இரண்டு கட்டங்களாக வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
இதில் முதல் கட்டமாக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் முதல் கட்டமாகவும் 248 சபைகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 93 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக 557 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றன.
93 குறித்த உள்ளாட்சி நிறுவனங்களுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்துவதங்கான கால அவகாசம் நேற்று முன்தினம் நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் நேற்று பிற்பகல் 1.30 வரை எதிர்ப்புக்களையும், முறையீடுகளையும் தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்து.