விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று ஸ்விட்ஸர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்விட்ஸர்லாந்து, ஜேர்மன் மற்றும் இலங்கை நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களுள் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் அவரது உதவியாளர் ஆகியோரும் அடங்குவர்.
1999 முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், தவறான வழிகளில் நிதிசேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுமார் 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் சேர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அவர்கள் சுவிட்சர்லாந்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக வங்கியில் போலியான சம்பள சான்றிதழ்களை காண்பித்துள்ளனர்.
மேற்படி பதின்மூவர் மீதும் மோசடி, போலி ஆவணப்படுத்தல், பணச் சலவை மற்றும் பணம் பறித்தல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்விட்ஸர்லாந்தில் எல்.டி.டி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாமையால் அவ்வியக்கத்துக்கு நிதி வழங்கியதன் பேரில் சந்தேக நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
எனினும் பொய்யான ஆவணங்கள் மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் பணம் திரட்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும்.
இவ்வாறு பெறப்பட்ட நிதி சிங்கப்பூர், டுபாய் வழியாக எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்குச் சென்று சேர்ந்ததாகவும் அவற்றை ஆயுதங்கள் வாங்க விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகவும் கருதப்படுகிறது.