மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று பொரலஸ்கமுவ பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவால் இந்த சுற்றவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு முகாமையாளராக செயற்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும். 7 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் திருமணமாகாத இரண்டு பெண்களும், திருமணமான 3 பெண்களும் விவாகரத்தான பெண்ணொருவரும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையத்தில் உள்நுழைவதற்காக ரூபாய் 2 ஆயிரம் அறவிடப்பட்டுள்னதுடன், பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
காவற்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள பெண்கள், குருநாகல், காலி, இரத்மலானை, நீர்கொழும்பு மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
19 தொடக்கம் 24 வயதிற்கு உட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் நடாத்திச் செல்லப்பட்டுள்ள இந்த மசாஜ் நிலையமான விபச்சார விடுதி, இரண்டு மாடி கொண்ட சொகுசு கட்டிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாதாந்த வாடகை அடிப்படையில் பெறப்பட்டு நடாத்திச் செல்லப்பட்டுள்ளமை காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.