இளம் ஆசிரியை ஒருவர் இணையத்தளம் ஒன்றில் வெளியிட்ட திருமண விளம்பரத்தை பார்வையிட்ட நபர் ஒருவர்.
தான் ஒரு பொறியியலாளர் எனவும் ஆசிரியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து அவரிட மிருந்து திருமண செலவுகளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவை பெற்று தலைமறைாகியுள்ளார்.
இதனையடுத்து அவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமல் தொலைபேசி உரையாடல்கள் மூலமே தொடர்பை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தில், இருவரும் விரைவாக திருமணம் செய்து கொள்வோம் எனவும் அதற்கான செலவுகளுக்காக தனக்கு 50 இலட்சம் ரூபா வரை தேவைப்படுவதாகவும் தந்துதவுமாறு சந்தேக நபர் குறித்த ஆசிரியையிடம் கோரியுள்ளார்.
ஆசிரியை தனது காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க 50 இலட்சம் ரூபாவை எடுத்துக் கொண்டு தனது காதலை முதன்முதலாக நேரில் சந்தித்து பணத்தையும் கையளித்து விட்டு திரும்பியுள்ளார்.
மறுபடியும் சந்தேக நபர் ஆசிரியைக்கு அழைப்பு விடுத்து தனக்கு மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிடுமாறு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து இச்சந்தேக நபர் ஆசிரியருடன் தொலைபேசி மூல தொடர்பை இடைநிறுத்திவிட்டு எவ்வித தகவல்களும் இன்றி பணத்துடன் மாயமாகியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதையறிந்த குறித்த ஆசிரியை மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.