ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு 138 வருடங்கள் பழமையானதும் நாட்டின் பிரதான சிறைச்சாலையுமான போகம்பறை சிறைச்சாலை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளிக்கப்பட்டது.
சிறைச்சாலையை கையளிக்கும் நிகழ்வு சிறைச்சாலை வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சிறைச்சாலையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.