நைஜீரிய போகோ ஹராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் 63 பெண்களும் சிறுமிகளும் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் வடகிழக்கு பொர்னோ மாநிலத்திலுள்ள டாம்போவா நகரில் கடத்திச் செல்லப்பட்ட 68 பேரில் மேற்படி 63 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.
டம்போவா நகருக்கு அண்மையிலுள்ள இராணுவத் தளமொன்றை தாக்குவதற்கு போராளிகள் சென்ற வேளையிலேயே இந்தப் பெண்களும் சிறுமிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.
அதேசமயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் 50 க்கும் மேற்பட்ட கிள்ச்சியாளர்களை தாம் கொன்றுள்ளதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொர்னோ மாநிலத்திலுள்ள சிபொக் நகரிலிருந்து தம்மால் கடத்தப்பட்ட 200 க்கு மேற்பட்ட பாடசாலை சிறுமிகளை போகோ ஹாராம் போராளிகள் தொடர்ந்து பயணக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
அந்த சிறுமிகளை விடுவிப்பதற்கு பதிலாக சிறையிலடைக்கப்பட்டுள்ள தமது போராளிக்குழு உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என போகோ ஹராமால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை நைஜீரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அந்தப் போராளி குழுவிற்கு பெண் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைம்பெண்களையும் விதவைகளையும் அணுகி போகோ ஹராம் உறுப்பினர்களை அவர்களுக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.