சென்னையை சேர்ந்தவர்கள் பாபு-கலா. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன், மனைவியான இவர்களுக்கு, கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் கலா ஒரு பகீர் புகாரை கொடுத்தார். அதில், ‘11 வயது மகளுடன், என் கணவர் பாலியல் தொடர்பு வைத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாபு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு துரதிருஷ்டவசமான வழக்கு. கணவரை பழிவாங்க, பெற்ற மகளை கற்பழித்தார் என்ற பயங்கரமான குற்றச்சாட்டை கணவர் மீது மனைவி சுமத்தியுள்ளார்.
அதனால், மனுதாரரின் 11 வயது மகள், எழும்பூர் கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதியிடம் அளித்து வாக்குமூலத்தை வாங்கி படித்து பார்த்தேன்.
ஆனாலும், இந்த வாக்குமூலத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், அந்த சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தேன். எழும்பூர் நீதிபதியிடம் வாக்குமூலத்தில் என்ன கூறினாரோ, அதைதான் என்னிடமும் கூறினார்.
இந்த வழக்கு என்னுடைய (நீதிபதியுடைய) மனசாட்சியையே உலுக்கிவிட்டது. மகள்களை தன்னுடன் அழைத்து செல்வதற்காக, பெற்ற மகளுடன், கணவர் பாலியல் உறவு வைத்துள்ளார் என்று புகார் செய்யும் அளவுக்கு ஒரு தாய் செல்வாரா? என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
ஆனால், ‘குடும்பநல கோர்ட்டுகளில் கணவரை பழிவாங்க இதுபோன்ற கீழ்த்தரமான புகார்கள் கொடுக்கப்படுகின்றன என்று என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
எனவே, மனுதாரர் பாபு மீதான இந்த போக்சோ வழக்கு ஒரு நொடி பொழுது கூட தொடரக்கூடாது. தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து சிறிது கூட கவலைப்படாமல், தன் கணவருக்கு எதிராக மனைவி ஒரு கேவலமான புகாரை கொடுத்துள்ளார். இது ஒரு மோசமான நடவடிக்கை. இது தொடர்வதை அனுமதிக்க முடியாது.
இப்படி ஒரு பொய் புகாரை கொடுத்த கலா, அதற்குரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டும். பொய் புகார் கொடுத்த கலா மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவர் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.