இன்றைக்கு எல்லாரும் பரபரப்பாக உச்சரிக்கும் பெயர் ‘ஹாதியா’ கேரள மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகனின் மகள் ஹாதியா.
இருபத்தைந்து வயதாகும் பெண் தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட முடிவு செய்யும் உரிமையில்லையா? வீட்டுக்காவலில் எப்படி வைக்கலாம்? என்று எல்லாரும் ஹாதியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹாதியாவுக்கிற்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில் காதல் திருமணம் செய்ததற்காய் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட பதினெட்டு வயதேயான சபாவைப் பற்றி கேளுங்கள்.
துப்பாக்கியில் சுட்டு மூட்டையாக கட்டி ஆற்றில் வீசப்பட்டவர் உயிருடன் திரும்பியிருக்கிறார் சபா. நெஞ்சை உறையச் செய்திடும் அந்த சம்பவம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது வென்றது.
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் அருகில் உள்ள குஜ்ரன்வாலாவில் வசித்த வந்த சபா மற்றும் காய்சர் இருவருக்கும் நான்கு ஆண்டுகளாக காதல் இருந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். மகள் சபாவின் காதலுக்கு அப்பா சம்மதம் தெரிவித்திருந்தார்.
காதலித்தவனை கரம் பிடிக்க வீட்டில் சம்மதம் கிடைத்து விட்டது என்ற மகிழ்வுடன் தன் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் காதலன் காய்சருடன் போனிலும் அவ்வப்போது நேரிலும் சந்தித்து பேசி வந்திருக்கிறார்.
காதல் திருமணம் என்றால் எப்படி சண்டையில்லாமல் நடந்தேறுவது. இதோ சபாவின் திருமணத்திற்கு எதிரியாக அவளது மாமா வந்தார்.
சபாவின் அம்மா அப்பா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க, இந்த திருமணம் நடக்ககூடாது என்றார் மாமா… கேட்டதற்கு அவன் நம் அந்தஸ்த்தை சார்ந்தவன் அல்ல நம்மை விட மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறான் என்றிருக்கிறார்.
சபாவின் அப்பா யோசிக்க ஆரம்பித்தார். அப்படியானால் சபாவை யார் திருமணம் செய்து கொள்வது என்று கேட்க… அவரது மாமா தன் உறவினர் பையன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவன் திருமணம் செய்து கொள்வான் என்றிருக்கிறார்.
அப்பாவின் மனதை மாமா மாற்றியிருக்க வேண்டும் சபாவை மாமா சொன்ன பையனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வர்புறுத்த ஆரம்பித்தனர்.
சபா உடனடியாக தன் காதலர் காய்சருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கிருக்கும் சூழலை தெரிவித்தார். உடனே அவர்களும், ‘நீ இங்கே வந்துவிடு’ என்று அழைத்திருக்கிறார்கள்.
இங்கே நாங்கள் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். நீங்கள் சேர்ந்து வாழலாம் என்று சொல்ல சபா வீட்டை விட்டு வெளியேற தயாரானார்.
இவர்கள் திட்டமிட்டபடி அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார் சபா. அங்கே காத்திருந்த காய்சருடன் கிளம்பினார். நேராக கோர்ட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டனர்.
விஷயம் சபாவின் குடும்பத்தினருக்கு கசிந்தது. அன்றைய நாள் இரவே சபாவை காய்சரிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றனர்.
சபாவிடம் மிரட்டியும் கெஞ்சியும் பார்த்தார்கள். குடும்பத்தின் மானத்தை வாங்காதே, எங்கள் கௌரவம் உன் கையில் தான் இருக்கிறது, மரியாதையாக வீட்டிற்கு வந்து விடு என்று சொல்லி வலுக்கட்டாயமாக இழுத்தார்கள்.
சபா தன் காதலில் உறுதியுடன் இருப்பதையரிந்து, நீ வீட்டிற்கு வந்து விடு பின்னர் நாங்கள் உங்கள் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
குர்ரான் மீது கை வைத்து சத்தியம் செய்து.. சபா, உன்னை அடித்து துன்புறுத்த மாட்டோம். உங்கள் இருவருக்கும் நாங்கள் நிச்சயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள் சபாவின் குடும்பத்தினர்.
பெற்றோர்களும் உறவுகள் இவ்வளவு தூரம் கெஞ்சுகிறார்கள். குர்ரான் மீதும் சத்தியம் செய்து விட்டார்கள் இனி நம்மை பிரித்து விடுவார்களோ என்ற பயமில்லை என்ற நிம்மதியுடன் பெற்றோருடன் கிளம்பினார் சபா.
காய்சர் வீட்டிலிருந்து கிளம்பிய சீரிப்பாய்ந்தது. சில மணி நேரத்தில் வழியில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. காரின் உள்ளே உட்கார்ந்திருந்த சபாவை அவரது மாமா வெளியில் இழுத்தார். அங்கேயே கடுமையாக தாக்கப்பட்டார் சபா.
நிலைகுலைந்த சபா தன்னை விட்டு விடும்படி கெஞ்சிக் கொண்டிருக்க ஓங்கி அறையும் உதையும் விழுந்து கொண்டேயிருந்தது, சபாவின் குரலை அவர்கள் யாருமே கேட்கவில்லை.
துப்பாக்கியை எடுத்து சபாவின் மூளையருகே பிடிக்கப்பட்டது. அவளது மாமாவோ கழுத்தை பிடித்திருந்தார். சபா தன் உயிரை காப்பாற்ற அவர்கள் பிடியிலிருந்து விலக அசைந்து கொண்டேயிருந்தார்.
இரண்டே விநாடிகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சபா அசைந்து கொண்டிருந்ததில் குண்டு தவறுதலாக கன்னத்தில் நுழைந்து விட்டது. சபா மயக்கமானார். அவரைக் கொன்ற உறவினர்கள் எல்லாரும் சபா இறந்து விட்டதாகவே நினைத்தனர்.
மூட்டையாக கட்டி ஆற்றோரத்தில் வீசிவிட்டனர். அடர் இருட்டு சுற்றிலும் ஆள் நடமாட்டமேயில்லை மயக்க நிலையில் இருந்த சபா எப்படியாவது மீண்டு வந்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் குற்றியியுரும் கொலையியுருமாய் போராடினார்.
மெல்ல மெல்ல தன்னை சுதாரித்து மூட்டையிலிருந்து வெளியே வந்தார்.
துளி வெளிச்சம் கூட இல்லை. தூரத்தில் டூ வீலர் வருகின்ற வெளிச்சம் அதை வைத்து அவர் நிற்கும் இடத்தை தாண்டி சில தூரங்களில் பெட்ரோல் பங்க் இருப்பது தெரிந்தது.
தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று முனகிக் கொண்டே தூரத்தில் தெரிந்த பெட்ரோல் பங்கிற்கு அவராகவே செல்ல அங்கேயிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரம்பத்தில் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நினைத்திருந்திருக்கின்றனர். சிகிச்சை முடிந்த மயக்கம் தெளிந்து தனக்கு என்ன நேர்ந்தது என்பதை சபா சொன்ன பிறகே உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
சபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சபாவின் தந்தை மற்றும் மாமா மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது.
ஆரம்பத்தில் எப்படியிருந்தேன். இப்போது கன்னத்தில் குண்டு துளைத்து முகமே சிதைந்து எப்படியிருக்கிறேன் என்று நினைக்கும் போதே சபாவுக்கு அழுகை பீறிட்டது.
அப்போது சபாவுக்கு ஆதரவாக இருந்தது காதலர் காய்சர் மட்டுமே. உண்மையில் நான் சபாவை எவ்வளவு தீவிரமாக காதலிக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவள் மட்டும் இல்லையென்றால் நானும் இறந்திருப்பேன் என்கிறார் காய்சர்.
தீவிர சிகிச்சை முடிந்து காதலருடன் வீட்டிற்கு திரும்பினார் சபா.
குர்ரான் மீது அவர்கள் பொய் சத்தியம் செய்தார்கள். துன்புறுத்தவே மாட்டோம் என்று சொல்லிவிட்டு என்னை கொல்லத் துடித்தார்கள். அவர்களை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன்.
என்ன நடந்தாலும் சரி, இடையில் யார் வந்தாலும் சரி. என் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று உறுதியாக சொன்னார் சபா.
ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலை செய்யப்படுகிறார்கள். என் கதையே கடைசியாக இருக்க வேண்டும்.
மீண்டும் இப்படியான ஒரு கதை உருவாகவே கூடாது, என்னை கொலை செய்ய முயற்சித்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுடைய தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.அப்போது தான் எல்லாருக்கும் பயம் வரும்.
புகுந்த வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கையையே நகர்த்திக் கொண்டிருக்கிறார் சபா. ஆனால் சபாவின் அம்மா மற்றும் உறவுகளோ சபா மீது தான் தவறு இருப்பதாக சொல்கிறார்கள். கௌரவத்தை கெடுத்து விட்டாள் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட சபாவின் தந்தை மற்றும் மாமாவோ தாங்கள் செய்தது மிகவும் சரி தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து சபா கூறும் போது, இங்கே என் கணவர் குடும்பாத்தாருடன் நான் சந்தோசமாகத் தான் இருக்கிறேன் ஆனால் என் பெற்றோரும் உறவுகளும் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது,
ஆனால் ஒன்று என் தந்தையை சந்தித்தவர்கள் என்னிடம் வந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தந்தையை மன்னித்து விடு என்றார்கள்.
கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கே வந்த சபாவின் தந்தை, இனி இப்படி நடக்காது எங்களை மன்னித்து விடு கேஸை வாப்பஸ் வாங்கு என்று கெஞ்சியிருக்கிறார். அவளது மாமாவும் கெஞ்சியிருக்கிறார்.
சபா துளி கூட இறங்கவேயில்லை. நீங்கள் செய்தது மிகப்பெரிய குற்றம் உங்களை மன்னிக்கவே மாட்டேன் என்று தான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
எப்படியாவது இதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் சபாவின் மாமியார் மற்றும் அவர்கள் வீட்டு பெரியவர்களிடத்தில் பேசப்பட்டது.
அவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இனி வாழ்நாள் முழுமைக்கும் சிறையிலேயே இருக்கட்டும் என்று சபா திட்டவட்டமாக சொன்னதன் விளைவு இது. வக்கீல், பெரியவர்கள் எல்லாரையும் சந்தித்து பேசினார்.
அவள் தான் உயிர் தப்பிவிட்டாள் தானே இனி ஏன் இப்படி வீம்பு செய்கிறாள். காய்சர் குடும்பம் விரைவாக சமாதானம் ஆகவேண்டும் இது உங்களுக்கும் தான் அசிங்கம் இந்த பகை அப்படியே வழி வழியாக தொடரும்.
அதனால் இரண்டு குடும்பங்களும் சமாதானம் ஆகிடுங்கள் என்று தீர்ப்பளித்தனர் ஊர் பெரியவர்கள்.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற சபாவின் மாமியாரிடம் இதற்கு சபா எப்படியாவது சம்மதிக்க வேண்டும்,அவளை சம்மதிக்க வைத்து நாளை கோர்ட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லப்பட்டது.
ஊறை மீறி நாம் என்ன செய்ய முடியும் என்ற வாக்கியத்துடன் காய்சரின் குடும்பத்தினர் எல்லாரும் சபாவிடம் பேச ஆரம்பித்தனர். குர்ரானில் சொல்லப்பட்டவை எல்லாம் எடுத்துக் காண்பிக்கப்பட்டது.
குழம்பிய மனநிலையில், சரி சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் சபா.
கேஸை வாப்பஸ் வாங்கிடு.
ஒப்புக்கொண்டார். கோர்ட்டில் தான் அப்பாவையும் மாமாவையும் மன்னிப்பதாக தெரிவிக்க இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
என் விதி என்ன சொல்கிறது என்று தெரியாது. மீண்டும் அவர்கள் கையாலயே கொல்லப்படலாம் யாருக்குத் தெரியும் என்கிறார் சபா. தற்போது ஒரு குழந்தையுடன் கணவர் வீட்டில் சந்தோசமாக வாழ்கிறார்.