ஜனநாயகக் கட்சிகளோட மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க வேணும்’ எண்டு சுமந்திரன் எம்.பி ஒரு போடு போட்டிருக்கிறார்.
இதை எங்கயோ இருந்து அறிஞ்ச மனோ கணேசன் விடாதே பிடி எண்டமாதிரி, அதுதானே விக்கியரைத்தான் ஜனாதிபதியாக்கோணும் எண்டு ஒரு பிடி பிடிச்சுக்கொண்டிருக்கிறார்.
இதைக் கேட்ட சனமெல்லாம் சிரி சிரியெண்டு சிரிக்கிது.
முதல்ல, இது விக்கியைப் பப்பாவில ஏத்திற காரியமோ எண்டு ஒரு ஆள் சந்தேகமாகக் கேட்டார்.
ஏனெண்டால், ‘இப்பிடித்தான் அவரைப் பப்பாவில ஏத்தி முலமைச்சராக்கிப் போட்டு, பிறகு பாடாய்ப்படுத்தி இப்ப ஆஸ்பத்திரியில படுக்க வைச்சிருக்கினம்’ என்கிறார் அவர்.
இதுக்கும்மேல, ‘சுமந்திரன் எம்.பி சொல்கிற மாதிரி, விக்கியை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுகொண்டாலும் கூட்டமைப்புக்காரர் இதை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளுவினமோ?’ எண்டு அடுத்த கேள்விக்குண்டை இன்னொருத்தர் போடுறார்.
இதோட கூட்டமைப்புக்காரர் கனபேர், விக்கியை முதலமைச்சராகவே ஏற்றுக்கொள்ளயில்லை. அவர் வாயைத்திறந்தாலே கடிச்சுக்குதறுகிற மாதிரி அவரை எதிர்த்துப் பேசிறதும் அறிக்கை விடுகிறதுமாக அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கினம்…
இதுவரையில அவரின்ரை கதையை ஆர்தான் மதிச்சிருக்கினம்?
இரணைமடுத்திட்டத்தைப் பற்றி, முதலமைச்சர் எடுத்த நிலைப்பாட்டை பகிரங்கமாகவே சிறிதரன் எம்பி எதிர்த்தார். இன்னும் அந்தத் திட்டத்தைப்பற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர அவருக்கு ஒருத்தரும் ஒத்துழைப்புக் குடுக்கேல்ல.
இதால விக்கியர் திறைசேரியின்ரை செயலாளரைச் சந்திக்க முடியாமல் ஒளிச்சுக்கொண்டு திரியிறார். திறைசேரியின்ரை செயலாளரைச் சந்திக்கிறதெண்டால், சரியோ பிழையோ இந்தத்திட்டத்தைப்பற்றி ஒரு முடிவைச் சொல்ல வேணும்.
அவையள் கேட்கிற கேள்விக்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல வேணும்… இதுக்கு ஒரு முடிவெடுக்க முடியாமல் விக்கியர் குழம்பிப்போயிருக்கிறார்.
மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எப்பிடிப் பயன்படுத்திறது எண்டு கதைச்சுப்பேசி ஒரு திட்டத்தைப்போடுறதுக்கும் விக்கியரோட ஒருத்தரும் முறையாக ஒத்துழைக்கேல்ல.
இதால வடமாகாணசபைக்கு ஒதுக்கின காசு திரும்பிப்போறதுக்கும் வாய்ப்பிருக்கு.
அதைவிட, போரால பாதிக்கப்பட்ட சனங்களின்ரை அத்தியாவசியத்தேவைகளைப் பற்றி விக்கியர் ஒரு திட்டத்தைப்போடுறதுக்கும் ஆரும் உதவவில்லை.
இப்படியான நிலைமையிலதான் வடமாகாணசபைக்குச் சொந்தமான முத்திரை வரி உட்பட்ட வருமானம்கூட மத்திய அரசுக்குப் போய்க்கொண்டிருக்குது.
இதெல்லாம் முதலமைச்சரை – விக்கியரை ஏற்றுக்கொள்ளயில்லை எண்ட வருத்தத்தால வந்த வினை.
இந்த வருத்தம் எப்ப தொடங்கினது எண்டால், விக்கியர் பதவிப்பிரமாணம் செய்யேக்கயே தொடங்கினது. அதுக்கு முதல்ல விக்கியரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடேக்கையே தன்ரை எதிர்ப்பையும் வயிற்றெரிச்சலையும் அள்ளிக்கொட்டினது, யாழ்ப்பாணத்துப் பத்திரிகை ஒண்டு.
அதின்ரை முதலாளியும் விக்கிக்கு முகம் சுழித்ததையும் நாங்க கொஞ்சம் நினைச்சுப்பாக்கவேணும்.
இந்தப் பேப்பரும் நாலைஞ்சு தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் விக்கிக்கு எதிராகவே தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கிதுகள் எண்டதையும் நாங்கள் கணக்கில எடுக்கோணும்.
இப்பிடி இவையே ஆளுக்காள் மோதுப்பட்டுக்கொண்டிருக்கேக்க, அவங்களைப்போய் (ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் கட்சிகள், மலையகக்கட்சிகள் எல்லாத்தையும்) விக்கிக்கு ஆதரவளியுங்கோ எண்டால் எப்பிடியிருக்கும்?
விக்கியர் முதலமைச்சராக வந்தாப்பிறகு பொறுப்பெடுத்த பிறகு முஸ்லிகளின்ரை பிரச்சினையைப்பற்றி எப்பவாவது உருப்படியாகக் கதைச்சிருக்கிறாரா? இல்லாட்டிக்கு மாகாணசபைதான் முஸ்லிம்களின்ரை பிரச்சினைக்கு உருப்படியாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கா?
இதையும் விட சுமந்திரன் எம். பியும் மனோ கணேசனும் சொல்லிறதைப்போல விக்கியரை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளிறதுக்கோ இல்லாட்டிக்கு அவரை ஜனாதிபதியாக ஆக்கிறதுக்கோ இந்தக் கட்சிகள் ஒத்துவருமா? ஏனெண்டால், இந்தக் கட்சிகள் முற்றுமுழுதாகவே இனவாதக்கட்சிகள் எண்டதை இவை மறந்திட்டினமோ?
ஏதோ இந்த அரசாங்கம்தான் இனவாத அரசு எண்டமாதிரியும் தெற்கில இருக்கிற மற்றக்கட்சிகள் எல்லாம் சிறுபான்மையினரைத் தங்கட தலைமையாக ஏற்றுக்கொள்ளுவினம் – ஏற்றுக்கொள்ள வேணும் எண்டமாதிரியும் கதைக்கிறது வெறும் பசப்புக்கதைதான்.
இது வேற ஒண்டுமில்ல, மகிந்தரை அடுத்த தடவையும் ஜனாதிபதியாக்கிறதுக்கு எடுக்கிற காவடிதான். இப்பிடித்தான் முந்திப் பிரபாகரனும் ஒரு காவடி எடுத்து மகிந்தரை கதிரையில இருத்தினவர். அந்த வழியில அவற்ற வாரிசுகள் இப்ப சிந்திக்கினம்…
அதோட இது கொஞ்ச நாளைக்கு பேப்பர்காரருக்கும் இணையப்புரட்சியாளருக்கும் நம்மட தமிழ்ச்சனங்களுக்கும் வாயில அவலைப்போடும்…
அப்பிடியே பிறகு தாராளமாக அவலத்தையும் தரும்…
ஹி..ஹி…ஹி…