ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காகன யோசனை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியை மீளமைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெசில் ராஜபக்ஷவும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அஹூன்கலயில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழுவை சந்தித்திருந்தார்.
அதன் பின்னரே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது