தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது
மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, இடைத்தேர்லில் திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாணிக்க தாகூர் 14,693 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முதல் சுற்றில் 21967 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா 8,321 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியன் 5,475 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வருகிறார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சின்ராஜ் 33 ஆயிரத்து 22 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
கன்னியாகுமாரியில் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் கணமூர்த்தி 28 ஆயிரத்து 753 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 20 ஆயிரத்து 200 வாக்குகள் பெற்று முன்னி்லை வகித்து வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பொன். கவுதம் சிகாமணி 32 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 48 ஆயிரத்து 167 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை யில் இருந்து வருகிறார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 31 ஆயிரத்து 169 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன் முதல் சுற்றில் 8 ஆயிரத்து 537 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜொதிமணி முன்னிலை பெற்று வருகிறார்.
திருவாரூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை வகித்து வருகிறார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ் 43 ஆயிரத்து 253 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் 34 ஆயிரத்து 724 வாக்குள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 31 ஆயிரத்து 213 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் 2-வது சுற்றில் திமுக கூட்டணியிவ் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6 ஆயிரத்து 249 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நடராஜன் 7 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.
மத்திய சென்னையில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 29 ஆயிரத்து 755 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் 3-வது சுற்றில் 52 ஆயிரத்து 671 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 32 ஆயிரத்து 266 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 30 ஆயிரத்து 576 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் 33 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 7 ஆயிரத்து 406 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.