வளர்ப்பு நாயால் இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அதுத் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் குறித்தக் குடியிருப்புப் பகுதியில் மனிதத் தலையொன்று வீசப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்டப் பொலிஸார் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மீட்கப்பட்ட மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும், கடந்த டிசெம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 83 வயதுடைய பெண்ணின் தலையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.