மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் வாவியில் குதித்து காதல் ஜோடியில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி உயிர் தப்பியுள்ளார். நேற்றுக் காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் வாவியில் காதல் ஜோடியொன்று குதித்துள்ளது. இதனை அவதானித்த பொதுமக்களும் பொலிஸாரும், மீனவர்களும் இணைந்து இவர்களை மீட்டெடுத்துள்ளனர்.
மீட்டெடுக்கப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்து காதலன் உயிரிழந்துள்ளார். காதலி உயிர்தப்பியுள்ளர் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. 22 வயதான காதலனே உயிரிழந்தவராவார்.
இவர்கள் இருவரும் ஏலவே திருமணம் செய்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.