நாமக்கல்லில் முதுமை வரை இணை பிரியாமல் வாழ்ந்த கணவன், மனைவி, சாவிலும் இணை பிரியாமல் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி(90), இவருக்கு ரங்கம்மாள்(85) என்ற மனைவியும் உள்ளார். ரங்கம்மாள் கடந்த இரண்டு வார காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார்.
முத்துசாமியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் ரங்கம்மாள் உடல் நிலை மோசமானதால் உயிரிழந்தார். மனைவியின் பிரிவை தாங்காமல் அவர் நினைவோடு இருந்த முத்துசாமியும் அன்றே இறந்தார்
முத்துசாமி இறந்ததை கண்ட அவரது உறவினர்கள் இருவரையும் ஒன்றாக அடக்கம் செய்தனர்.
திருமணம் முடிந்த நாட்களில் இருந்து இருவரும் சண்டை கூட போட்டதில்லை எனவும், எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவார்கள் இணை பிரியாத ஜோடி என்பதால் சாவிலும் இணை பிரியாமல் இறந்திருப்பது, அக்கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.