வட இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள சிறிய கிராமமொன்றில் வசிக்கும்18 வயதுடைய யுவதியொருவரை, அவரது குடும்பத்தினர், கௌரவக் கொலைச் செய்வதற்கு முயற்சித்தமையால், அந்த யுவதி உயிருக்காக போராட்டிக் கொண்டிருக்கின்றார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த யுவதி, மாற்று மதத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருடன், கடந்த 3 வருடங்களாக இரகசியக் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றையதினம் தனது காதலனுடன் குறித்த யுவதி உரையாடியதைக் கேட்ட அவரது இளைய தங்கை, இது தொடர்பில், தந்தை மற்றும் சகோதரனுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
விடயத்தை அறிந்துகொண்ட 52 வயதுடைய தந்தை மற்றும் 32 வயதுடைய சகோதரன், காதலனுடனான தொடர்பைத் துண்டிக்குமாறு, யுவதியை வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அவர் அதை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.
இதனால் கடும் கோபத்துக்கு உள்ளான, தந்தை மற்றும் சகோதரன், குறித்த யுவதி மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப்பிரயோகத்தில், யுவதியின் முகத்தையும் மார்புப் பகுதியையும் ரவைகள் துழைத்துள்ளன.
யுவதியை, குடும்பத்தினர் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்காத போதும் பொலிஸாரே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகவும், அந்த யுவதி, உயிருக்கு போராட்டி கொண்டிருப்பதாகவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.