பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவியான டிவிங்கிள் கன்னாவுக்கு ‘விலை உயர்ந்த’ வெங்காய காதணிகளைப் பரிசளித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கரீனா கபூருடன் இணைந்து நடிகர் அக் ஷய் குமார் பங்கேற்றார்.
அதன்பின் வீடு திரும்பியபோது மேற்படி வெங்காய காதணிகளை கொண்டுவந்தாராம்.
இது குறித்து அக் ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கன்னா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
‘எனது கணவர் எனக்காக இந்தப் பரிசை வாங்கி வந்துள்ளார்.
கபில் ஷர்மா ஷோவில் முதலில் கரீனாவுக்கு இந்த காதணியை அவர்கள் காட்டினர்.
ஆனால், அதை அவர் (கரீனா) அவ்வளவு விரும்பவில்லை போல.
எனக்குப் பிடிக்கும் என நினைத்து இதை அக் ஷய் வாங்கி வந்துள்ளார்.சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதைக் கவரலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.