மாத்தறை மஹானாம சமரவீர பாலத்திலிருந்து தமது இரண்டு பிள்ளைகளையும் நில்வலா ஆற்றில் வீசிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார்.
இன்று முற்பகல் 11.30 அளவில் குறித்த நபர் தமது பிள்ளைகளை ஆற்றினுள் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை கண்காணித்த இராணுவ வீரர்கள் சிலர் உடனடியாக சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட இரண்டு வயது சிறுவனும் நான்கு வயது சிறுமியும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் திக்வெல்ல ரத்மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தாயாருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து தம்மை அழைத்துவந்த தந்தை ஆற்றுக்குள் வீசியதாக குறித்த சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.