அது கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி. நேரமோ இரவு 8 மணியை கடந்திருந்தது. மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு பரபரப்புடன் வந்த இருவர் ‘சேர்……. காமண்டுக்குப் போன மகளை காணவில்லை சேர்’ என கண்ணீர் வழிய முறைப்பாடளித்தனர்.
உடனடியாக முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். மஹியங்கனை தம்பகொல்ல – அலுகெட்டியாவ பிரதேசத்தில் தனது மாமா வீட்டில் தங்கியிருந்து ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்த 18 வயதான யுவதியே காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாட்டினை பதிவு செய்து கொள்ளவே விடயம் மஹியங்கனை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சத்துரங்க ஊடாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ குமாரவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மஹியங்கனை பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேவுக்கும் விடயம் தெரியப்படுத்தப்பட அவரின் ஆலோசனைக்கமைவாக காணாமல் போன யுவதியை தேடும் படலம் ஆரம்பிக்கப்பட்டது.
காணாமல் போனவர் 18 வயதான அழகிய யுவதி. எந் நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள், ஐவர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.
விவசாய குடும்பமொன்றில் பிறந்த இவர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை வாங்கும் கனவில் இற்றைக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்னரேயே அந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தாள்.
தனது வீட்டிலிருந்து ஆடைத் தொழிற்சாலை தூரத்தில் இருந்ததால் தனது மாமாவின் (அம்மாவின் சகோதரன்) வீட்டில் தங்கியிருந்தவாறே வேலைக்கு போய் வந்தாள்.
12 ஆயிரம் ரூபா மாத சம்பளம் பெற்ற அவள் காலை 7.30 மணிக்கெல்லாம் சென்று மாலை 6.30 மணி ஆகும் போதெல்லாம் தனது தங்குமிடத்துக்கு வந்துவிடுவாள். வெள்ளிக்கிழமைகளில் தனது தாய் வீட்டுக்கு செல்லும் அவள் மீண்டும் திங்களன்று வேலைக்கும் திரும்பிடுவாள்.
வேலை முடிந்து வழமையாக நிறுவன போக்குவரத்துச் சேவையிலேயே வரும் இந்த யுவதி மாமாவின் வீட்டிலிருந்து 300 மீற்றர்களுக்கு முன்னால் இறங்கி நடந்து வருவதை வழமையாக கொண்டிருந்தாள்.
ஏனெனில் அந்த தூரத்தில் உள்ள சிறிய பாதையில் நிறுவன போக்குவரத்துச் சேவை வாகனத்தை செலுத்துவது கடினமாக இருந்தமையே அதற்கான காரணமாகும்.
இந்நிலையில் தான் இந்த யுவதி கடந்த முதலாம் திகதி இரவு 11 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது மாமா, தந்தையால் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலில் யுவதி வேலை பார்த்த ஆடைத் தொழிற்சாலையில் இருந்து விசாரணைகளை ஆரம்பித்த மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க, குறித்த யுவதி வேலை முடிந்து நிறுவன போக்குவரத்துச் சேவையில் தங்குமிடம் நோக்கி சென்று அங்கு இறங்கியுள்ளதை உறுதி செய்து கொண்டனர்.
யுவதியுடன் வேலைப்பார்ப்போரை விசாரணை செய்ததில் இவை உறுதியானது.
அப்படியானால் தங்குமிடம் செல்ல அவள் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து செல்லும் 300 மீற்றருக்குள்ளேயே ஏதோ ஒன்று நடந்துள்ளது என்ற அனுமானத்துக்கு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க அந்த 300 மீற்றர் பகுதியை இரவோடிரவாக விசேட சோதனைக்கு உட்படுத்தலானார்.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடனும் சகோதர பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பொலிஸாரின் அனுமானத்தின் பிரகாரமே சில தடயங்கள் சிக்கின.
இலேசாக தூறிக் கொண்டிருந்த மழைக்கு மத்தியில் இடம்பெற்ற அந்த சோதனை நடவடிக்கைகளின் போது யுவதியின் மாமா வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவில் அவளின் குடை, ரோஸ் நிற பாதணிகள், கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு ஆகியன ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை பொலிஸார் அவதானித்தனர்.
அவற்றை பார்க்கும் போது யுவதி பவவந்தமாக கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு வந்த பொலிஸார் சிதறிக் கிடந்தயுவதியின் உடமைகளிடையே சந்தேகிக்கத்தக்க தடயங்கள் இரண்டையும் கண்டுபிடித்தனர்.
அதாவது சந்தேகநபருடையது என அனுமானிக்கத் தக்க பாதணி ஜோடி ஒன்றும் பிளாஸ்டிக் குழாய் கொண்டு பிடி செய்யப்பட்டிருந்த சிறு கத்தியொன்றுமே அவ்வாறு பொலிஸாரின் கண்களில் சிக்கின.
இந் நிலையில் தான் விடயம் தொடர்பில் ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.ஏ.சரத் குமார், பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி ஆகியோரினதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து அவ்விரு உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.லியனகேயின் தலைமையில் விசேட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ குமார, மஹியங்கனை பிரதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக ஆகியோரின் கீழ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுதேஷ் சத்துரங்க தலைமையில் உபபொலிஸ் பரிசோதகர்களான ஜயதிலக, விக்ரமசூரிய ஆகியோருடன் கான்ஸ்டபிள்களான சம்பத் (37588), திஸாநாயக்க (28534), செனவிரத்ன (28533), கருணாதிலக (7698), தனுக (71610), சந்தலால் (75337), பிரியந்த (76682) ஆகியோரைக் கொண்ட குழுவே விசாரணைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் மறுநாள் (2 ஆம் திகதி) உதயமானது. தேடுதல்கள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போதுதான் யுவதியின் சடலம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான தேக்கு மரக் காட்டிலிருந்து மீட்கப்பட்டது.
சடலத்தை பார்வையிட்ட பொலிஸார் யுவதி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை தெரிந்துகொண்டனர். ஸ்தலத்துக்கு வருகை தந்த மஹியங்கனை மேலதிக நீதிவான் பிரேத பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டதுடன் சந்தேக நபர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து பதுளை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய சோதனைகளில் குறித்த யுவதி கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியானது.
யுவதியின் சடலம் இருந்த தேக்குமரக் காட்டின் பகுதிகளை பொலிஸார் சல்லடை போட்டு தடயங்களைத் தேடிய போதும் பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. மாறாக சடலத்தின் அருகே இருந்து எரிந்து முடிந்த பீடித் துண்டொன்று மட்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தான் பொலிஸாரின் விசாரணைகள் சந்தேக நபரை அடையாளம் காணும் விதமாக முடுக்கிவிடப்பட்டது.
பதுளை பொலிஸ் தடயவியல் பிரிவினரும் ஹசலக பொலிஸ் மோப்பநாய் பிரிவில் இருந்து ஜீனா எனப்படும் மோப்பநாய் அதன் பொறுப்பாளர் கான்ஸ்டபிள் கருணாரத்னவும் (76558) ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டனர்.
யுவதியினட் உடமைகள் சிதறிக் கிடந்த பகுதியில் இருந்த சந்தேகிக்கத்தக்க பாதணி ஜோடியை மோப்பம் பிடித்த ஜீனா பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் போய் நின்றது.
அந்த வீடானது பூட்டப்பட்டிருந்தது முழு ஊரும் யுவதியை தேடி அலைந்த போதும் அந்த வீட்டிலிருந்த 20 வயதான திஸாநாயக்க முதியன்சலாகே சுரங்க குமார என்பவர் மட்டும் தலைமறைவாகியிருந்தார். இது பொலிஸாருக்கு சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
சந்தேகத்துக்கு இடமான பாதணி ஜோடி, கத்தி ஆகியவற்றை சுரங்க குமாரவின் தாயாருக்கு காட்டி அதனை உறுதிப்படுத்த பொலிஸார் முற்பட்டனர்.
ஆரம்பத்தில் அவை தனது மகனுடையது அல்ல என குறிப்பிட்ட தாய் பின்னர் அவை தனது மகனுக்கு சொந்தமானவை என்பதை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சுரங்க குமாரவை தேடிய வேட்டையை பொலிஸார் தீவிரப்படுத்தினர்.
பொலிஸாருடன் சேர்ந்து ஊராரும் சுரங்கவை தேடினர். இதன் போதுதான் உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்கவுக்கு தகவல் ஒன்று கிடைக்கின்றது.
“சேர்…….. நீங்கள் தேடும் நபர் அவரது மனைவியையும் இழுத்துக் கொண்டு பாழடைந்த வீட்டிலிருந்து காட்டுக்குள் ஓடுவதைக் கண்டேன்” என நபர் ஒருவர் அந்த தகவலை வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஊரார், ஊர் காவற்படை பொலிஸ் குழுக்கள் என அனைவரும் இணைந்து அலுகெட்டியாவ காட்டை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
இதன்போது அந்த காட்டில் உள்ள எல்ஹேன தலாவ எனும் குன்றில் சுரங்க குமாரவும் அவனது காதலியும் இருப்பதை பொலிஸார் அவதானித்தனர்.
பொலிஸாரை கண்ட சுரங்க குமார காதலிக்கு பலாத்காரமாக நஞ்சை ஊட்டிவிட்டு தானும் அருந்திக் கொண்டான். எனினும் பொலிஸார் விடவில்லை. இருவரையும் உடனடியாக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் வைத்து சுரங்க குமாரவை பொலிஸார் கைது செய்தனர். 20 வயதான சுரங்க குமார பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவன்.
திருமணம் முடித்து மூன்று மாத அவனுக்கு குழந்தையும் உள்ள நிலையில் அவன் 15 வயதுடைய சிறுமியை காதலித்து கடத்திக் கொண்டு வந்து குடும்பம் நடத்திவந்துள்ளான்.
அது குறித்து பொலிஸார் அவனை கைது செய்த நிலையில் காதலி நீதிமன்றம் ஊடாக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டாள். எனினும் விளக்கமறியலில் இருந்து திரும்பிய அவன் காதலியை அவள் பாட்டியிடமிருந்து பலாத்காரமாக கூட்டிச் சென்று குடும்பம் நடத்தலானான்.
இதனிடையேதான் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி 18 வயது யுவதியை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு இரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள சுரங்க குமார தான் நபர் ஒருவரை கொலை செய்துவிட்டதாகவும் பொலிஸார் தன்னை தேடுவதாகவும் குறிப்பிட்டு காதலியை கட்டாயப்படுத்தி காட்டுக்குள் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
அன்றைய இரவு அங்கு தங்கியுள்ள அவன் தோட்டமொன்றில் இருந்த மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை பிடுங்கி இரவு உணவை கற்குகையிலேயே தயார் செய்துள்ளான்.
நஞ்சருந்திய நிலையில் சந்தேக நபரும் அவனது 15 வயது காதலியும் காப்பாற்றப்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போதுதான் காதலிக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாது என்பதை பொலிஸார் அறிந்து கொண்டுள்ளனர்.
“இவன் பெண் ஒருவரை இப்படி கொடூரமாக கொலை செய்தான் என எனக்கு தெரியாது. என்னையும் கட்டாயப்படுத்தியே உடன் வைத்திருந்தான்.
நான் அவனுக்கு பயந்தே கூடவே குன்றில் இருந்தேன். இந்த கொடூரனை வெளியே விடாதீர்கள்” என சசிகலா பொலிஸாரிடம் கண்ணீருடன் கெஞ்சியுள்ள நிலையில் கொல்லப்பட் ட யுவதியின் புகைப்படம் ஒன்றையேனும் காட்டுமாறு கோரியுள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபரான சுரங்க உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்கவிடம் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை விசாரணையின் போது வழங்கியுள்ளார்.
“அவள் ஒவ்வொரு நாளும் காமண்ட் பஸ்ஸி ல் இருந்து இறங்கி எனது வீட்டின் முன்னாலேயே செல்வாள். அன்று திலகே மாமாவின் கடைக்கு வந்து பீடிகள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவள் வேலை விட்டு வரும்வரை காத் திருந்தேன்…
இவ்வாறு தான் செய்த கொடூரம் தொடர்பில் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
தொடர்ந்து சாட்சியமளித்துள்ள சுரங்க
சம்பவத்தின் பின் வீட்டுக்கு ஓடினேன் வீட்டில் சசிகலா மட்டுமே இருந்தாள். பொலிஸார் பிடிவி றாந்து ஒன்றுக்காக என்னை தேடுவதாக கூறி எனது காதலியை யும் இழுத்துக் கொண்டு காடடுப்பகுதியில் உள்ள பாழ டைந்த வீடொன்றுக்கு சென்றேன்.
பின்னர் நபரொருவரை கொலை செய்ததாக நான் கூறவே காதலி அங்கிருந்து செல்ல முற்பட்டாள். நான் அவளை மிரட்டி காட்டுக்குள் உள்ள குன்றுக்கு அழைத் துச் சென்றேன்” என வாக்கு மூலமளித்துள்ளான்.
How Mahiyanganaya Rape suspect caught – Video