ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவை மாத்திரமல்லாது நான்காவது தடவையும் அவரே வெற்றி பெறுவார்.
ஏன் என்றால் பிறவியிலேயே அதிர்ஷ்டசாலி என சிரேஸ்ட ஜோதிடரும், ஜனாதிபதியின் ஜோதிட ஆலோசகருமான தேசபந்து சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார்.
8 ஆம் இலக்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராசியான இலக்கம் என்பதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார்.
உலகத்தில் எந்தவொரு ஜனாதிபதியும் தனது பிறந்த தினத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்தியது இல்லை.
ஆனால் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்துக்கு முதல் நாளான 2005 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. 17 ஆம் இலக்கத்தின் கூட்டுத்தொகை 8 ஆகும்.
மேலும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பு மனுத்தாக்கல் 17 ஆம் திகதியே செய்யப்பட்டது.
17 ஆம் இலக்கத்தின் கூட்டுத்தொகை 8 ஆகும். தேர்தல் 2010 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது. 26 இன் கூட்டுத்தொகை 8 ஆம் ஆகும். எனவே கடந்த காலங்களில் இலக்கம் எட்டு மிகவும் அதிர்ஷ்ட்டமாக காணப்பட்டள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 8ஆம் திகதியே இடம்பெற்றது.
தேர்தலும் 8ஆம் திகதியே நடைபெறவுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராசி உள்ளதால் இலக்கங்களும் தானாகவே வந்து அமைகின்றன.
மேலும் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற பொதுதேர்தலையடுத்து சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கான பொறுப்புகளை 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையேற்குமாறு அறிவித்தார்.
இது லொற்றிரி பரிசு போன்றது. ஏன் என்றால் தானாகவே 8 ஆம் திகதியன்று அவர் பொறுப்புகளை ஏற்கும் வகையில் அமைந்தது. அதிர்ஷ்டம் உள்ள ஒருவருக்கு இயற்கையாக இது போன்று அதிர்ஷ்டங்கள் அமையும்.
இதேவேளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலை இம் மாதம் 8 ஆம் திகதி முற்பகல் 10.20க்கு தாக்கல் செய்தார்.
இந்த நேரம் மிகவும் சக்திவாய்ந்த நேரமாகும். இந்த நேரத்தில் வலுவான இரு யோகங்கள் இருந்தன.
மேலும் ஜனாதிபதி தனது வேட்புமனுவை இடது கையினாலே ஆணையாளரிடம் ஒப்படைத்தார். இது பிழையான விடயமல்ல. கடந்த தேர்தலிலும் இடது கையிலேயே வேட்புமனுவை ஒப்படைத்திருந்தார். காரணம் இது ஒரு நல்ல திசையாகும்.
சகல காரியங்களும் சுபநேரத்தின்படியே இடம்பெறுகின்றது. முதலாவது தேர்தல் பிரசார கூட்டமும் சுபநேரத்தின்படியே இடம்பெற்றது. மேலும் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் வாக்களிக்க செல்லும் எல்லாம் சுபநேரப்படியே இடம்பெறும்.
ஆட்சி செய்யும் அதிகாரம் அவர் கூடவே பிறந்த ஒன்றாகும். இரண்டாவது தேர்தலில் உலகத்தில் உள்ள எந்தவொரு தலைவர்களாலும் பதிவு செய்ய முடியாத வெற்றியை பதிவு செய்தார். எனவே நடைபெற உள்ள தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி.