நடிகை ரம்பா தனது கணவர் இந்திரனுடன் சேர்த்து வைக்கக் கோரி தொடர்ந்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கணவரை சேர்த்து வைக்க கோரி நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் கணவர் தன்னை குடித்துவிட்டு அடித்ததாலும் தனது 2 பெண் குழந்தைகளை மாமியார் ஏற்காததாலும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறியிருந்தார்.
மேலும், வழக்கு முடியும் வரை செலவுக்காக மாதம் தோறும் ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் அளிக்க கணவருக்கு உத்தரவிடுமாறும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ரம்பா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கை ஜனவரி 21ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பணியில் இருப்பதால் தன்னால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்று ரம்பா கூறியுள்ளார்.