அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இராணுவ அணி வகுப்பில் உலகின் மிகப் பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றினை வடகொரியா காட்சிப் படுத்தியுள்ளது.
வட கொரிய தலைநகர் பியோங்கியங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இரண்டு மணிநேர நிகழ்வின்போது இரு பக்கமும் தலா 11 டயர்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனமொன்றில் இந்த ஏவுகணை இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டது.