நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுபான சாலைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் பெரும் திரளாக கூடியிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.