கத்தாரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விதியை மீறுபருக்கு 55,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட கத்தாரில் 30,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மசூதிகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய கட்டுமான திட்டங்களை கத்தார் ஆராய்ந்து வருகிறது.