தியவன்னா ஓயாவில் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் 40 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தியவன்னா ஓயாவில் நேற்றைய தினம் (09) மாலை 5.45 மணியளவில் ஒருவரது சடலம் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டது.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையின் கிம்புலாவல பாலத்தை அண்மித்து முதலை கைவிட்டுச் சென்ற உடல், கடற்படை வீரர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.