தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.சற்றுமுன்பு ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இனி அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா முதலமைச்சராகவே நீடிப்பார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.