முள்ளியவளை மேற்கு கிராமவாசி ஒருவரின் இல்லத்தில் கணினிக்குள் பாம்புகள் குடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் இந்த பாம்புகளை பராமரிப்பதாகவும், கணினியின் வெற்றுப்பெட்டிகளில் இந்த பாம்புகள் குடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் புதூர் நாகதம்பிரான் கடவுளின் பக்தன். அதனால் இந்த பாம்புகளை நான் பராமரிக்கின்றேன். இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன்.
மேலும், இந்த பாம்புகள் தொடர்ச்சியாக இங்கு தங்கி நிற்பதில்லை. எப்போதாவது ஒரு நாள் வந்து செல்கின்றது. அதற்காக கணினி வெற்றுப் பெட்டிகளை வீட்டின் வெளிப்பக்கத்தில் வைத்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.