நாட்டில் இதுவரை 1,67,171 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று (24) மாத்திரம் 2,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
கொழும்பில் 605 பேருக்கும் களுத்துறையில் 472 பேருக்கும் கம்பஹாவில் 395 பேருக்கும் குருநாகல் மாவட்டத்தில் 171 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலியில் 168 பேருக்கும் இரத்தினபுரியில் 223 பேருக்கும் மாத்தளையில் 88 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.
நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,39,946 பேர் குணமடைந்துள்ளனர்.
24,772 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான மூன்றாவது அலையில் மாத்திரம் 70,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மேலும் 33 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றிரவு உறுதி செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாத்திரம் 05 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் கடந்த 06 நாட்களில் உயிரிழந்த 28 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்றிரவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 33 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.