யாழ் செம்மணிப் பகுதியில் அதி வேகமாக வந்த காா் ஒன்று வளைவில் திரும்ப முடியாது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் தலைகுப்பறப் புரண்டு உருண்டு விபத்துக்குள்ளானது.
காரில் வந்தவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பியுள்ளனா். அத்துடன் அவா்கள் போதையில் வந்ததாகவும் தெரியவருகின்றது.
யாழில் கடந்த இரு வாரங்களில் 327 பேர் பொலிஸாரால் கைது: யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சர் நிஹால் பெரேரா தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 327 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவிலுள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும் 14ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையான காலத்தில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அடித்துக் காயப்படுத்தியமைக்காக 58பேரும், கொள்ளை தொடர்பாக ஒருவரும், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் ஒருவரும், குடிபோதையில் கலகம் விளைவித்தமைக்காக 6 பேரும், சந்தேகத்தின் அடிப்படையில் 8பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 33பேரும், வாகன விபத்து தொடர்பாக 12 பேரும்…..,
களவு சம்பந்தமாக 5பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக 4பேரும், அத்து மீறி வீட்டில் நுழைந்தமைக்காக ஒருவரும், போலி நகையை அடவு வைத்தமைக்காக 2பேரும், சுற்றுச் சூழல் பாதிப்படையும் வகையில் செயற்பட்டமைக்காக 2பேரும், பாதுகாப்புக் காரணங்களுக்காக 4பேரும், சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவரும், மோசடி சம்பந்தமாக ஒருவரும், ஏனைய குற்றங்களுக்காக 66 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 20ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையான காலப்பகுதயில் எட்டு பொலிஸ் நிலையங்களினாலும் 121 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 3பேரும், சட்டவிரோத மது விற்பனைக்காக 9பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12பேரும், சந்தேகத்தின் அடிப்படையில் 11பேரும், குடிபோதையில் கலகம் விளைவித்தமைக்காக 14பேரும், ஏனைய குற்றங்கள் தொடர்பாக 72 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நல்லூர் உற்சவத்தில் யாழ். மாநகர சபைக்கு ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா வருமானம்:முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அறிவிப்பு
30-08-2014
நல்லூர் உற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு இந்த ஆண்டில் ஒரு கோடியே 37 இலட்சத்து 58 ஆயிரத்து 801 ரூபா 5 சதம் வருமானமாகக் கிடைத்துள்ளது என நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநகர சபையின் இறுதிக் கூட்டத்தில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின் மாநகர சபை நிர்வாகம் முடிவுறவுள்ள நிலையில் நேற்று வியாழக்கிழமை இறுதிக் கூட்டம் நடைபெற்றது.
தமது பதவிக் காலத்தில் நிறைவான சேவையை மாநகர சபை வழங்கியுள்ளதாகவும் கடந்த காலங்களில் 30 இலட்சம் ரூபா வரையே நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கான வருமானமாக கிடைத்தது என சுட்டிக்காட்டிய முதல்வர் கடந்த 2012 ஆண்டில் 96 மில்லியன் ரூபாவும் கடந்த 2013 ஆம் ஆண்டில் 1.14 மில்லியன் வருமானம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
இதேபோல் இந்த ஆண்டில் 1.37 மில்லியன் ரூபா வரை கிடைத்துள்ளதாக தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தில் மாநகர சபையின் சகல தரப்பு ஊழியர்களும் கடமை என்று மட்டுமன்றி சேவை நோக்குடனும் தமது பணிகளை ஆற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தமது சபை இந்த வருமானத்தைப் பெற உதவிய வருமானப் பகுதியினருக்கும் சுகாதார சேவையைச் சிறப்பாக வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக் களையும் நன்றிகளையும் முதல்வர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.